
உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்! தமிழர் தலைவர்நெருக்கடி காலத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர் ஆசிரியர் மு.க.ஸ்டாலின் தஞ்சை, மே 18- உலகத் தமிழர்களின் ஆதரவால் தான் ஈழத் தமிழர்களுக்கு விடியல் ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உணர்ச்சிப் பேருரையாற்றினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய நுநடயஅ கூயஅடைள றடைட நேஎநச ஞநசளை என்ற ஆங்கில நூலும், இலட்சியப்....... மேலும்
18 மே 2013 18:45:06

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்! மேலும் வீரர்கள் சிக்குகின்றனர் சென்னையில் 6 தரகர்கள் கைது! 13 இடங்களில் சோதனை! ரூ.14 லட்சம் பறிமுதல் மே 24-இல் தி.க. மாணவரணி, இளைஞரணி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் சென்னை, மே 18- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதான வீரர் களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 வீரர்கள் சிக்குகின்றனர். சென்னையில் 13 இடங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.14 லட்சம் ரொக்கப் பணம்....... மேலும்
18 மே 2013 17:20:05

வல்லம், தஞ். மே 17- பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மின் னணு தொலைத் தொடர்பு துறை, ஒளிபரப்பு பொறியாளர் கழகம் தஞ் சாவூர் பிரிவு மற்றும் பல்கலைக்கழக இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆகியவை சார்பாக உலக தகவல் தொலைத் தொடர்பு நாள் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் மின்னணு தொலைத் தொடர்பு துறை தலைவர் பேரா. வயலட் ஜூலி வரவேற்றார். ஓளிபரப்பு பொறியாளர்கள் கழகத்தின் தஞ்சை பிரிவு முதன்மை....... மேலும்
17 மே 2013 16:57:04

ஜூன் 9: வில்லிவாக்கத்தில் புரட்சிக் கவிஞர் விழாவட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு சென்னை, மே 15- வட சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் கலந்துரை யாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கடந்த ஞாயிறன்று (12.5.13) மாலை 6 மணியளவில் நடைபெற்றது. வட சென்னை மாவட்ட ப.க. தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தலைமை வகித்து உரையாற்றினார். இவ்வாண்டு....... மேலும்
15 மே 2013 17:00:05

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு விழாவளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் சிறப்பான பல்கலைக் கழகம் நீதியரசர் மோகன்மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் பல்கலைக் கழகம் வேந்தர் கி.வீரமணி வல்லம், மே 13- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் சிறப்பான பல்கலைக்கழகம் என்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா ஆண்டான 25 ஆவது ஆண்டு வேந்தர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற....... மேலும்
13 மே 2013 17:27:05

கடவுள் வெறும் கல் என்பது உண்மையானது! கோயில் நகை கொள்ளை தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள கபிஸ்தலம் மேட்டுத் தெருவில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு பூட்டப் படுவது வழக்கம். இரவு வழக்கம் போல் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். வெள்ளி (10.5.2013) அதிகாலை பூசாரி கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை....... மேலும்
13 மே 2013 16:16:04

பகுத்தறிவின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உலகத்தில் எங்குமே இல்லை!பழகு முகாமின் நிறைவு நாளில் தமிழர் தலைவர் கருத்துரை! நிறைவு நாள் நிகழ்வில் பிஞ்சுகளுடன் பெற்றோர்கள்... தஞ்சை, மே 12- பழகுமுகாமின் நிறைவு நாளில், பெரியார் பிஞ்சுகள், பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியவர்களாய் பார்த்து, பகுத்தறிவின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லை என்று பேசினார் பெரியர் பிஞ்சு யாழ்மொழிக்கு பிறந்த நாள் பழகு முகாமின் நிறைவு நாளான ஆறாம் நாளில் கடந்த அய்ந்து....... மேலும்
12 மே 2013 18:09:06

பழகு முகாம் - அய்ந்தாம் நாள்புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச்சூடியை சரியாய்ச் சொன்ன பெரியார் பிஞ்சுகளுக்குத் தமிழர் தலைவர் பரிசு! புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச்சூடியைச் பிழையில்லாமல் சொல்லும் பெரியார் பிஞ்சுவை பார்க்கும் தமிழர் தலைவர், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் (10.5.2013) தஞ்சை, மே 11- பெரியார் பிஞ்சுகளை ஊக்குவிக் கும் வகையில், புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச் சூடியை பிழையில்லாமல் சொல்லுகின்ற பெரியார் பிஞ்சுகளுக்குப் பரிசு என்று தமிழர் தலைவர்....... மேலும்
11 மே 2013 16:13:04

திருவையாறு ஆப்ரேட்டர் ப.கோவிந்தராசன் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரையாற்றினார். உடன் மறைந்த கோவிந்தராசன் குடும்பத்தினர் மற்றும் கழக முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (10.5.2013).திருவையாறு ஆபரேட்டர் ப.கோவிந்தராசன் படத் திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்று கையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட கருத்து மணிகள்: 1. திராவிடர் கழகத் தோழர்களும், கட்சிக்கு அப்பாற் பட்ட பொதுமக்களும், நகரப் பிரமுகர்களும் இவ்வளவு திரளாக நீங்கள் கூடியிருக்கின்றீர்கள் என்றால்,....... மேலும்
11 மே 2013 16:04:04

புகைவண்டியில் மாணவர்கள் உல்லாச சவாரி தஞ்சை, மே 10- மாமன்னன் சரபோஜியின் அரண் மனை, அதிலுள்ள அரிய நூலகம், கலைக்கூடம், சிவகங்கை பூங்கா என்று இன்பச் சுற்றுலா சென்ற பெரியார் பிஞ்சுகளின் உற்சாகம் இறக்கை கட்டிப் பறந்தது. பெரியார் பிஞ்சு வழங்கும் பழகுமுகாம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக குழந்தைகளை மெருகேற்றிக் கொண்டே இருந்தது. முக்கியமாக ஆக்கபூர்வமான கேள்விகளை கேட் பதில் நல்ல வளர்ச்சி தெரிந்தது. தக்க பதில்களும் அவ்வப்பொழுது சொல்லப்பட்டுக்கொண்டே இருந்தது........ மேலும்
10 மே 2013 18:16:06
சேதுசமுத்திரத்திட்டம், ஈழத்தமிழர் வாழ்வுரிமை, காவிரிநதிநீர்ப் பிரச்சினை ஆகியவற்றை நிறைவேற்றக்கோரி எழுச்சி முழக்கத்தோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்!

சென்னை, ஏப்.14-சேதுசமுத்திரத்திட்டம், ஈழத்தமிழர் வாழ்வுரிமை, காவிரி நதிநீர்ப்பிரச்சினை ஆகியவற்றை நிறைவேற்றக்கோரி மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் விவரம் வருமாறு:
காஞ்சிபுரம்
தமிழர் தலைவர் அவர்களின் ஆணைப்படி 11.4.2012 அன்று காலை 10.30 மணியளவில் தந்தை பெரியார் நினைவுத்தூண், காந்தி சாலை, காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. செங்கற்பட்டு மாவட்டத் தலைவர் அ.கோ.கோபால்சாமி தலைமை வகித்து பேசினார்.
பொதுக்குழு உறுப்பினர் இரா.கோவிந்தசாமி, செங்கை மாவட்ட செயலாளர் ஆ.சண்முகம், மா.சுந்தரபிரபாகரன், காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர், த.சத்யா, கா.இ.அ.தலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி மாவட்ட தி.க. தலைவர் டி.ஏ.ஜி. அசோகன், காஞ்சி மாவட்ட செயலாளர் செ.ரா.முகிலன் ஆகியோர் ஆர்ப் பாட்டத்தை விளக்கி உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து கருத்துரையாற்றியோர்: பொதுக்குழு உறுப்பினர் இரா.கோவிந்தசாமி, செ.ந.த. க.சுந்தரம், வா.ஒ.அ. ஆ.மோகன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் துவக்கத்திலும் முடிவிலும் ஆ.மோகன் ஒலிமுழக்கமிட அனைத்து தோழர் களும் முழக்கமிட்டனர். ஏ.கந்தன், ந.மோகனவேலு, சுந்தரபிரபாகரன், பொன்.இராஜேந்திரன், இரா. குழந்தைவேலு, திருமங்கலம் நடராஜன், ஆர்.சந் திரன், சவுண்ட் சர்வீஸ் சேகர் உள்ளிட்ட தோழர் களும் பொது மக்களும் திரளாக பங்கேற்றனர். டீ.ஏ.ஜி.அசோகன் நிகழ்ச்சியை வழிநடத்தி நெறிபடுத்தினார்.
நெல்லை
நெல்லை திராவிடர் கழகத்தின் சார்பில் 11.4.2012 அன்று காலை 10.30 மணி அளவில் பாளையங் கோட்டை சந்தைத் திடலில் மாவட்டத் தலைவர் இரா.காசி தலைமையில், சீ.டேவிட் செல்லத்துரை, அய்.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் ச.இராசேந்திரன் ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார். நெல்லை மண்டலச் செயலாளர் மா.பால் ராசேந்திரம் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தினை விளக்கிப் பேசினார். இந்நிகழ்வினில் சீ.தங்கத்துரை, வழக்குரைஞர் த.வீரன் மண்டல இளைஞரணி செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் சிற்பி பாமா, சி.வேலாயுதம், பி.ஆர்.கே.அருண், கவிஞர் அழகப்பன், பானுமதி இராசேந்திரன், கீழப்பாவூர் பி.பொன்ராஜ், பெ.சுடலையாண்டி, ந.இராமச் சந்திரன், செ.செல்வராஜ், த.தமிழ்தாசன், மெஞ் ஞானபுரம் மருத்துவர் டே.அன்பரசன், பொன்மலர் அன்பரசன், கி.சேகர், ஜோன்ஸ், பொன்னை, நாராயணன், ஆர்.ஏ.எஸ்.முத்துவடிவு, பி.சாந்தி மு.இராமசாமி, பெரியார் பிஞ்சுகள் அன்பரசி, கண்மணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித் தனர். ஏராளமான பொதுமக்கள் ஆர்ப்பாட் டத்தின் நோக்கங்களுக்காகக் கழகத்தினைப் பாராட்டிச் செவிமடுத்தனர். சரியாக 10.30 மணியளவில் சிற்பி பாமா அவர்களின் நன்றியோடு ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.
திருப்பூர் திருப்பூர் மாவட்டத் தி.க. சார்பாக ஆர்ப்பாட்டம் 11.4.2012 காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள் முன்பாக மாவட்ட தி.க. தலைவர் இரா.ஆறுமுகம் தலைமை யில் நடைபெற்றது.
மாவட்ட கழகச் செயலாளர் வழக்குரைஞர் நா.சக்திவேல் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழகம் விடுதலையில் வெளியிட்ட ஆர்ப்பாட்ட முழக்கங்களை தொடர் முழக்கமிட்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் கணியூர் சாமிநாதன், மாநகரத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி, மாநகரச் செயலாளர் இல.பாலகிருட்டிணன், மாநகரத் துணைத் தலைவர் ஆட்டோ தங்கவேல், மாநகரத் துணைச் செயலாளர் தென்னூர் முத்து, திருப்பூர் ஒன்றிய தி.க. தலைவர் ஆசிரியர் முத்துமுருகேசன், திருப்பூர் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வம், உடுமலை நகரத் தலைவர், காஞ்சி மலையான், நகரச் செயலாளர் நா.மாயவன், பெரியார் புத்தக நிலையப் பொறுப்பாளர் க.மைனர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.பன்னீர்செல்வம் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் நாத்திக சாக்ரடீஸ், மாநகர இளைஞரணி செயலாளர் தே.மயில்மணி, திருப்பூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் துரைமுருகன், தாராபுரம் நகர இளைஞரணி தலைவர் விதி மோகன், தாராபுரம் ஒன்றியச் செயலாளர் நாத்திகச் சிதம்பரம், கணியூர் நகரச் செயலாளர் நா.இராமசாமி, பழனி மு.அன்பழகன், வி.வேலுச் சாமி, கு.மணிவண்ணன் ஆகிய தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
மாவட்ட ப.க. தலைவர் கழகச் சொற்பொழி வாளர் கு.கோபி வெ.குமாரராசா ஆர்ப்பாட்டத்தை விளக்கி உரையாற்றினார். ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட கழக அமைப்பாளர் வீ.சிவசாமி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்ட பேருரை மக்களை நெகிழ வைத்தது. கொளுத்தும் வெயிலில் திரளான மக்கள் காத்திருந்து கேட்டது பெரும் வியப்பாக அமைந்தது. இந்த ஆர்ப்பாட்டம் திருப்பூர் மக்களிடையே எழுச்சியை தோற்றுவித்தது.
சேலம்
சேலத்தில் 11.4.2012 அன்று ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் : சேலம் மாவட்டம் : க.ஜவகர் சேலம் மாவட்ட தலைவர், பூ.வடிவேல், சேலம் மாநகர தலைவர், அரங்க.இளவரசன், சேலம் மாவட்ட செயலாளர், அ.ச.இளவழகன், சேலம் மாநகர செயலாளர் சி.பூபதி மாவட்ட துணைத் தலைவர், கந்தசாமி கோவிந்தராஜன் கல்பாரப்பட்டி, எம். கமலம் மாதேஸ்வரன், தமிழ்ச்செல்வன், முன்னாள் தலைவர் பொறியாளர் மு.செல்வராசு, அ.இ.தமிழர் தலைவர், மாணவரணி தலைவர், ஆத்தூர் மாவட்டம் : வெ.அண்ணாதுரை, ஜெயராமன், சு.சுரேஷ், மண்டல இளைஞரணி அமைப்பாளர்
மேட்டூர் மாவட்டம் : பழனி புள்ளையண்ணன், சி.சுப்பிரமணியன், மேட்டூர் மாவட்ட தலைவர் ப.கலைவாணன், தலைவர் இளைஞரணி மேட்டூர் மாவட்ட தி.க., க.நா.பாலு, தலைவர் எடப்பாடி நகர தி.க. ராணி, முத்து, முரளி கிருஷ்ணன், மா.ராஜேஸ், கோ.இளையராசா, மா.கதிர்வேல், சே.அருள், ரா.ஜெயப்பிரகாஷ், அமைப்பாளர் மேட்டூர் மாவட்ட மாணவரணி ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் இறுதியில் சேலம் மாவட்ட செயலாளர் அரங்க.இளவரசன் நன்றி கூறினார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட கழகத்தின் சார்பில் 11.4.2012 அன்று நாமக்கல் அண்ணா சிலை முன்பு மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன தலைவர் பொத்தனனூர் க.சண்முகம், தலைமை வகித்து பேசினார். மாவட்ட தி.க. தலைவர் வெங்கரை மு.பழனியப்பன், மாவட்ட அமைப்பாளர் பெரியார் குடில் வை.நடராசன், மாவட்ட செயலாளர் குமாரபாளையம் அ.குமார், நகர தலைவர் கே.எஸ்.அசேன், ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
பாவேந்தர் பேரவைத் தலைவர் ப.சுப்பண்ணன், நகர தி.க. செயலாளர் வை.பெரியசாமி, மின்னக்கல் செல்வகுமார், கே.எஸ்.அசேன் ஆகியோர் தமிழகம் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்படுகிறது என்பதைப் பற்றி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டம் 1 மணி அளவில் முடிவுற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் : பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, ஒன்றிய தலைவர் ப.வடிவேல், துணைத் தலைவர் இராசகோபால், நகரச் செயலாளர் மு.சீனிவாசன், அன்புமணி, பொருளாளர் மருத.கோபாலன், செங்கோடன் (மி.வா.ஓய்வு), பழனிசாமி, பொத்தனூர் தலைவர் சத்தியசீலன், இளைஞரணி தோழர்கள் : ஆ.சுரேசு, ஜே.உதயகுமார், செயலாளர்: மண்டை ஓடு சரவணன், ஆசைத்தம்பி, பள்ளிபாளையம் ஒன்றிய செயலர், ஆகியோர் ஆர்ப்பாட்ட முழக்கங்களை முழங்க பகல் 1 மணி அளவில் மாவட்ட செயலர் நன்றி கூற ஆர்ப்பாட்டம் இனிதே முடிவுற்றது.
பெரம்பலூர்
11.4.2012 மாலை 5.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ப.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வெ.சித்தார்த்தன் வரவேற்புரையாற்றி னார். இரா.அரங்கராசு, துரைசாமி அமைப்பாளர், மற்றும் நா.ஆறுமுகம், நகரத் தலைவர் பிச்சை பிள்ளை, தா.நல்லுசாமி, பெ.பெரியசாமி, பழனி முத்து, மணிகண்டன், அம்பேத்கர், செல்வராசு, மா.வீரன், சின்னதுரை, குமாரசாமி, தென்னவன், ஏகலூர் மாணிக்கம் துரைசாமி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விண்ணதிர ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட இளைஞரணி தலைவர் க.கல்யாண சுந்தரம் நன்றி கூற ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
திருவாரூர் சேது சமுத்திர திட்டம், ஈழத்தமிழர் வாழ்வுரிமை, காவிரி நீர் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை கட்டளைப்படி 11-04-2012 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு திருவாரூர் பேருந்து நிலையத்தில் திராவிடர் கழக மாநில இளைஞர் அணி செயலாளர் , இரா.ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ப.க. அமைப்பாளர் சு.மனோகரன் வரவேற்புரை யாற்றினார்.
இரா.கோபால் திருவாரூர் மாவட்ட தலைவர், கா. கணபதி மாநில தொழிலாளர் பேரவை துணை செயலாளர், கிருஷ்ணமூர்த்தி திருத்துறைப்பூண்டி மாவட்ட தி.க. செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் கழகச் சொற்பொழிவாளர் அதிரடி அன்பழகன் சிறப்புரையாற்றினார். இதில் கி.அருண்காந்தி மா. து. தலைவர், க.வீரையன் மா. து. செயலாளர், க. முனியாண்டி மா. ப.க.தலைவர், சு.அறிவுக்கண்ணு நகர து. தலைவர், பி.கோவிந்தசாமி, பி.எஸ் அகமது, ஆத்மநாதன் மா.ஆலோசகர்கள், வீர.கோவிந்தராசு குடவாசல் ஒன்றிய தலைவர், பொய்யாமொழி நன்னிலம் ஒன்றிய செயலாளர், முத்துராசா விடுதலை செய்தியாளர், சி.சரசு மா. ம. செயலாளர், கோ.ராமலிங்கம் நகர ப.க. தலைவர், குணசேகரன் திருத்துறைப்பூண்டி நகரத் தலைவர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் வழக்கறிஞர் சு. சிங்காரவேலர் நன்றி கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.