Banner

Banner

தற்போதைய செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி!

ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி!

இட ஒதுக்கீட்டைக் குழி தோண்டிப் புதைப்பதா? ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி! சென்னை, மே 23- ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று.......

23 மே 2013 14:39:02

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே!

Image - இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே!

இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே! (தமிழர்கள்)சிந்துவெளி - திராவிட நாகரிகம் என்பதில்

புதன், 22 மே 2013

கல்விக் கடன் வழங்க தடை ஏன்?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தகுதி தேர்வில் 60 விழுக்காட்டுக்குக் குறை வாக மதிப்பெண்கள் பெற்று நிருவாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடையாது என்ற விதிமுறையை எதிர்த்து 16 மாணவர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தகுதியில்லாத மாணவர்களுக்குப் பொது மக்கள் பணத்தைக் கல்விக் கடனாக வழங்க முடியாது என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாக இல்லை - அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கும் உகந்ததாக இல்லை என்பது வெளிப்படை.

தகுதி - மதிப்பெண்ணுக்கும், கடன் உதவிக்கும் என்ன உறவு? கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்குத் தான் கடனே தவிர, சம்பந்தப்பட்ட மாணவன் எத்தனை மதிப்பெண் வாங்கினான் என்பதற்காக அல்ல.

தகுதித் தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கிய மாணவன் இறுதித் தேர்விலும் குறைந்த மதிப்பெண்தான் பெறுவான் என்ற உத்தரவாதம் ஏதாவது உண்டா?

இத்தகைய மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று, பணியிலும் சேர்ந்து கடனைத் திருப்பித் தரமாட்டார்கள் என்ற முடிவிற்கு வந்ததா நீதிமன்றம்?

அதிக மதிப்பெண்கள் பெற்று அதன் காரண மாகக் கடன்களைப் பெற்றவர்கள்தான் கடனைத் திருப்பிக் கட்டுவார்கள், தகுதி மதிப்பெண்கள் பெறாதவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவ தில்லை என்பதற்கு ஏதாவது புள்ளி விவரங்கள் உண்டா?

முதல் தலைமுறையாகத் தப்பித் தவறி கல்லூரி களில் காலடி எடுத்து வைப்பவர்களிடம் தேவை யில்லாத முட்டுக்கட்டை போட்டால், அம்மக்களின் நிலை என்னாவது?

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் போராடிப் போராடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தால், இன்னொரு வழியில் நுழைந்து அவர்களின் கல்லூரி நுழைவைத் தடுப்பதுபோல் இல்லையா இது?

வசதி வாய்ப்பு உள்ளவர்கள் கடன் பெற விண்ணப்பிக்கப் போவதில்லை. தலைமுறை தலைமுறையாக படித்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு இருக்கிறது.

இதில் பாதிக்கப்படுவது யார் என்றால் முதல் தலைமுறையாக கல்லூரிகளில் அடியெடுத்து வைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப் புற ஏழை எளிய மக்களே!

பெரும் பெரும் பணத் திமிங்கலங்கள், ஆலை அதிபர்கள் வங்கிகளில் திருப்பிச் செலுத்தக் கூடாது என்ற முடிவிலேயே, கடன் வாங்கும்போதே திட்டமிடுகிறார்கள். கோடிக் கணக்கில் வாராக் கடன் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படு கின்றன.

அதேநேரத்தில் கல்வி கற்பதற்காகக் கடன் கேட்கும்போது, மேஷம் ரிஷபம் பார்க்கிறார்கள் என்றால், இதில் நியாயம் இருப்பதாகத் தெரிய வில்லை.

கல்வி வளர்ச்சிக்காக - அதிலும் குறிப்பாக முதல் தலைமுறையாக கல்லூரிகளில் கால் எடுத்து வைக்கும் மக்களுக்காக, எந்த எல்லைக்கும் சென்று எல்லா வகையான உதவிகளையும் தந்து, கை தூக்கி விடுவது மக்கள் நல அரசின் அடிப்படைக் கடமையல்லவா!

இம்மக்களின் வளர்ச்சி - முன்னேற்றம் என்பது தனி மனிதர்களின் வளர்ச்சி என்பதைவிட ஒட்டு மொத்தமான சமுதாயத்தின் - நாட்டின் வளர்ச்சி அல்லவா!

மேலும் இதில் கவனிக்கத்தக்கது - அரசின் பெரும் செலவில் நடத்தப்படும் பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் படித்த வெற்றி பெறும் உயர்தட்டு மக்கள் இந்தியாவில் இருந்து பணி செய்ய விரும்புவதில்லை.

பட்டம் கிடைத்த கையோடு வானூர்தியில் பறந்து சென்றுவிடுகிறார்கள். உள்நாட்டில் இருந்து கொண்டு கடைசிவரை பணி செய்பவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களே! இவற்றையும் கவனத்தில் கொண்டு பொருளாதாரத்தில் பாவப்பட்ட மக்களுக்குக் கைகொடுத்துத் தூக்கி விடுங்கள் - இதுதான் சமூகநீதி இயக்கமான திராவிடர் கழகத்தின் கனிவான வேண்டுகோள்! அரசு புதிய கொள்கை முடிவினை எடுக்கட்டும்!



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

  • காணொளி
  • அறிவுரை
  • நிகழ்ச்சிகள்
  • கார்ட்டூன்
மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக்கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப் பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.(விடுதலை, 10.6.1970)
May 2013
S M T W T F S
week 18 1 2 3 4
week 19 5 6 7 8 9 10 11
week 20 12 13 14 15 16 17 18
week 21 19 20 21 22 23 24 25
week 22 26 27 28 29 30 31
  • அறிக்கை
  • மின்சாரம்
  • வாழ்வியல்
  • கருஞ்சட்டை







Banner

வாசகர் கருத்துகள்

  • தமிழ் நாளேடுகள் , வார ஏடுகள் இப்போது அவாள் துதி பா... மேலும்...
  • பக்தி என்றாலே சுய சிந்தனை இழப்பு என்றுதான் போலும்!... மேலும்...
  • வேற்று சாதியில் பெண் எடுப்பதை மனு நீதி சாஸ்திரம் ஏ... மேலும்...
  • அப்படியே ராமர் பாலம் கட்டியதாகவே வைத்துகொள்வோம் தா... மேலும்...
  • தானம் போன்ற நல்ல காரியங்கள் செய்வதற்கு நாள் நட்சத்... மேலும்...