
ஜகார்தா.ஆக.19- இந்தோனேஷியாவின் சுலேவெய்சி மாகாண தீவில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. இதில் 6 வயது குழந்தை உயிரிழந்தது . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் தென்கிழக்கே 50 கி.மீ. தொலைவில் பவுலுதீவில் கடலுக்கு அடியில் 10 கி. மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் போது அப்பகுதியில் விடுதிகள் , உணவகங்கள் மற்றும் கட்டடங்கள் ஆகிய 15 வினாடிகள் வரை குலுங்கின. இதில் 25 வீடுகள் சேதமடைந்தன. .