
போபால்.ஆக.5- அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்ததாலேயே அவர் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மீளும் கூறும்போது, ஹசாரே குழுவினரின் போராட்டங்கள் வெற்றி பெற்றிருந்தால் அவர்களுக்கு அரசியல் கட்சி துவங்கும் எண்ணம் வந்திருக்காது எனவும், அவர்களின் கட்சி இந்திய அரசியலில் என்ன செய்ய போகிறது என்பதையும் மக்களிடையே எவ்விதத்தை அங்கீகாரம் பெற போகிறது என்பதையம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும்
திக்விஜய் சிங் கூறியுள்ளார்.