
புதுடில்லி,ஜூலை.22 - குடியரசு தலைவர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில் மாநிலங்கள் வாரியாக பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.இன்று மதியத்திற்குள் முடிவுகள் தெரிந்துவிடும். எனினும் வெற்றி பிரணாப் முகர்ஜிக்கு தான் என உறுதியாகியுள்ளது. மாநிலங்களவை பொதுச்செயலர் அக்னிஹோத்ரி தேர்தல் முடிவுகளை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்.