அட்லாண்டா, ஜூன் 19 உலகி லேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தானாகவே இசையமைக்கும் ரோபோவை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் அட்லாண் டா நகரிலுள்ள ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ‘ஷிமோன்’ என்று பெயரி டப்பட்ட ரோபோவை உரு வாக்குவதற்கு கடந்த 7 ஆண்டுகளாக உழைத்தனர். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தானாகவே இசை யமைக்கும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டது. பீத்தோவன் முதல் பீட்டில்ஸ் வரை மற்றும் லேடி காகா முதல் மைல்ஸ் டேவிஸ் வரை பல்வேறு மேதைகளும், பிரபலங்களும் இசையமைத்த சுமார் 5,000 பாடல்கள் மூலம்ஷிமோனுக்குபயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், சாமான்யர்களின் இசையும் பயிற்சியின்போதுபயன் படுத் தப்பட்டது. இதன் மூலம் 4 கரங்களையும், 8மரக்குச்சிகளையும்உடைய ஷிமான், ‘மரிம்பா’ (கம்பி களால் இணைக்கப்பட்ட மெல்லிய மரக் கட்டைகளை தட்டுவதன் மூலம் ஒலியெ ழுப்பும் கருவி) மூலமான இசையில் தேர்ச்சி பெற்றுள் ளது.
இதனால், ‘ஷிமோன்’ தற் போது பாடல் வரிகளுக்கு ஏற்ப தானாகவே இசையமைத்து வருகிறது என்று அதன் வடிவமைப்பாளர்கள் தெரி வித்துள்ளனர்.