பொது மக்களுக்கு பொது விநியோகத் திட் டத்தின் கீழ் வழங்கப்படும் 66 லட்சம் டன் கோது மைக்கு உரிய பாது காப்பு இல்லாமல் திறந்த வெளி யில் கொட்டப்பட்டு கிடக் கின்றது என்பது செய்தி!
பஞ்சாப், அரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநி லங்களில் இந்த அவல நிலை. இது ஏதோ இப் பொழுது மட்டும் நடப்ப தல்ல; இது ஒரு மோச மான தொடர்கதை யாகும்.
இதுவரை உணவு தானி யங்கள் பயன்படுத்தப்படா மலேயே நாசமாகிப் போன பட்டியல்:
2008 இல் 20,114 டன்
2009 இல் 670 டன்
2010 இல் 634 டன்
2011 இல் 1346 டன்
மேற்கண்ட அளவில் உணவு தானியங்கள் பயன் படுத்தப்படாம லேயே நாசமா யின என்று மத்திய உணவுத் துறை அமைச்சகத்தின் அதி காரியே ஒப்புக் கொண் டார் என்பது வெட்கக் கேடு மட்டுமல்ல; மனித நேயமற்ற - சிறிதும் பொறுப்பற்ற செயலே!
இரவு உணவு இல் லாமல் பட்டினியாகக் கிடக்கும் மக்கள் இந்தி யாவில் கோடானுகோடி என்று இன்னொரு பக்கத்தில் சொல்லுவதும் இதே மத்திய அரசுதான். இந்தியாவில் 36 கோடி மக்கள் ஏழைகளாக இருப் பதாக திட்ட ஆணையம் மற்றொரு பக்கத்தில் கூறுகிறது. (தகவல்: திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேகு அலுவாலியா - நாள் 8.4.2012)
கிராமங்களில் நாள் தோறும் ரூபாய் 35, நகரங்களில் ரூபாய் 66 க்கும் குறைவாக சம் பாதிப்பவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே இருப் பவர்கள் என்று திட்டக் குழு கூறுகிறது.
உண்மையைச் சொல்லப்போனால் இந்த புள்ளி விவரம் கூட பொய்யில் புழுத்ததுதான்.
சாதாரண உணவு விடுதியில் காலைச் சிற் றுண்டி சாப்பிடுவதற்கே இப்பொழுதெல்லாம் குறைந்த பட்சம் ரூபாய் 50 தேவை என்ற நிலைதான். பெரும்பாலான மக்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைகளை, சித் தாந்தங்களை எல்லாம் பார்ப்பதில்லை. அன்றா டம் வீட்டுச் செலவுக் கணக்குப் பட்டியலைத் தான் பார்க்கிறார்கள் என்பது நினைவிலிருக் கட்டும்!
வாக்குக் கேட்கப் போகும்போது மக்கள் என்ன கேட்கிறார்கள், என்ன சொல்லுகிறார்கள் என்பது கூடவா மறந்து போயிற்று?
- மயிலாடன்