இம்முறை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தகுதியான செஸ் ஆனந்தின் பெய ரைப் பரிந்துரை செய்தால் அவருக்குப் பாரத ரத்னா விருது அளிக்கப் பிரத மருக்கு நிச்சயம் பரிந் துரை செய்வேன் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் கூறியுள்ளார்.
கிடப்பது கிடக்கட் டும்; கிழவனைத் தூக்கி மணையில் வை என்ற பழமொழிதான் நினை வுக்கு வருகிறது. இந்த நாட்டில் பார்ப் பன இனம், பார்ப்பன இனம் என்ற ஓர் இனம் உண்டு. அதன் சாமர்த்தி யமும், தந்திரமும், சுட்டுப் போட்டாலும் யாருக்கும் வரப்போவதில்லை. (வரவேண்டாம்!)
கிரிக்கெட்டில் பெரும் சாதனை படைத்ததாக சச்சின் டெண்டுல் கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண் டும் என்று தூபம் போட் டுப் பார்த்தனர். ஒரு செய்தியைச் சன்னமாகத் தூவிவிட்டு, அதனை அறு வடை செய்வதில் அவர் கள் காட்டும் சாமர்த் தியமே சாமர்த்தியம்!
கட்டிலுக்கு வெட்டப் பட்ட மரம் கலப்பைக்கா வது ஆகாதா என்ற முறை யில் எப்படியோ அவரை மாநிலங்கள் அவை உறுப் பினராக ஆக்கிவிட்டார் கள்.
பாருங்களேன். ஒவ் வொரு மக்கள் பிரச் சினையின் போதும் அப் படியே பிளந்து கட்டப் போகிறார் சச்சின் - நாடே மெய் சிலிர்த்து நிற்கப்போகிறது!
டெண்டுல்கருக்குத் தான் பாரத ரத்னா கிடைக்கவில்லை - செஸ் ஆனந்துக்கு முயற்சி செய்து பார்ப்போம் என்று பூணூலை உருவி விட்டுப் புறப்பட்டுவிட்டனர்.
விசுவநாதன் ஆனந் தின் சாதனைக்காக ஆனந்த விகடன் தலை யங்கமே தீட்டுகிறது.
கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்த கபில்தேவ், தோனி பற்றி இப்படி யெல்லாம் எழுதியதுண்டா?
எப்படி எழுதுவார்கள்? இவர்கள் தோள்களில் பூணூலா ஊஞ்சலாடு கிறது?
இப்பொழுது உலகக் கோப்பைக் கால்பந்தாட் டம் நடந்து கொண்டிருக் கிறது. இன்னும் சொல் லப்போனால் கிரிக்கெட் விரல் விட்டு எண்ணப் படக்கூடிய ஆங்கிலேயர் கள் கால் பதித்த சில நாடுகளில் மட்டுமே உண்டு. கால்பந்தோ பெரும் பாலான நாடு களில் ஆடப்பட்டும், திறமைக்கு உண்மையிலேயே இடம் உள்ள விளையாட்டு.
பார்ப்பன ஊடகங்கள் கிரிக்கெட்டுக்குக் கொடுத்த விளம்பரங் களைக் கால்பந்துக்குக் கொடுக்கின்றனவா?
காந்தியானாலும், கட வுளானாலும் பார்ப்பானுக் குப் பயன்படுவதைப் பொறுத்துதான் என்கிற போது, கால் பந்து எம்மாத் திரம்!
- மயிலாடன்