பல்வேறு குளறுபடி களுக்குப் பின், சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் நடந்த முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு சரியலாம் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், 86.20 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று அசத்தினர். கடந்த ஆண்டை விட, 0.9 சதவிகிதம் மாணவ, மாணவிகள் கூடு தலாகத் தேர்ச்சி பெற்றனர். இதற்குத் தாராள திருத்தம்தான் காரணம் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன - இப்படி செய்தி வெளி யிடுவது தினமலர் கும்ப லைத் தவிர வேறு யாராகத் தான் இருக்க முடியும்?
அதன் சொற்களையே பார்ப்போம்; பல்வேறு குளறு படிகளுக்குப் பின்.... என்று தினமலர் எழுதுகிறதே.... அது என்ன பல்வேறு குளறுபடிகள்? அவற்றைச் செய்தவர்கள் யார்? அறிவு நாணயத்தோடு வெளிப் படையாகச் சொல்லி இருக்கவேண்டாமா? இதில் என்ன பூடகம்?
பல்வேறு குளறுபடி களைச் செய்தது எல்லாம் தினமலர் தூக்கி வைத் துக் கொண்டாடும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தானே? எத்தனை மாதங் கள் பாழாயின- அரசின் பிடிவாதம்தானே காரணம்?
உச்சநீதிமன்றம்வரை சென்று கதவைத் தட்டியது யார்? நீதிமன்றம் குட்டிய வலி தாங்க முடியாத நிலை யில்தானே - வேறு வழி யின்றி ஒப்புக்குச் சப்பாணி யாய் சமச்சீர் கல்வித் திட்டத்திற்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டது?
அதிலும் ஆத்திரத்தைக் காட்டவில்லையா? பள்ளி ஆசிரியர்களுக்கு என்ன வேலை? திருவள்ளுவர் படம் உள்பட பெவிகால் வைத்து ஒட்டி மறைக்கப் படவில்லையா?
காந்தம் கறுப்பு - சிகப் பாக இருக்கிறது என்பதற் காக அதைக்கூட ஒட்டி மறைக்கவில்லையா?
இவ்வளவு குளறுபடி களையும் செய்த அரசை கம்பளி போட்டு மறைத்து விட்டு, யாரோ குளறுபடி களைச் செய்ததாக பந்தை வேறு பக்கம் அடிப் பானேன்?
கடைசியாக தினமலர் கொலம்பஸ் கண்டுபிடித் தது என்ன தெரியுமா? இவ் வாண்டு இருபால் மாணவர் கள் அதிக விகிதத்தில் வெற்றி பெற்றதற்குக் கார ணம் தாராள திருத்த மாம்!
இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி என்பது! அதிகமாக வெற்றி பெற்ற னர் என்றால், அதன் பொருள் - பட்டிக்காட்டு மக்களும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் அதிக வெற்றி பெற்றனர் என்பதுதான் அவாள் அக ராதி!
குறைந்த சதவிகிதத் தில் வெற்றி பெற்றால்தான் அவாள் அகராதியில் திறமையானவர்கள் பாசாகி விட்டனர் என்பார்கள். என்ன புரிகிறதோ! இதை எல்லாம் புரிந்துகொள்வ தற்கு ஈரோட்டுக் கண்ணாடி தேவை!
- மயிலாடன்