Banner

வாழ்வியல் சிந்தனைகள்

பொதுவாக வாழ்க்கையில் நமக் குப் பெருந் துணை  -நண்பர்களும், நல்ல புத்தகங்களும்தான்!

அதிலும் குறிப்பாக முதுமையை நோக்கி நாம் பயணிக்கும்போது, நல்ல நண்பர்கள், நமக்கு  மிகவும் தேவை. நல்ல புத்தகங்களும் நம்முடன் உறவாகும்!

நமது வாழ்விணையர்களை, தந்தை பெரியார் அவர்கள் உற்ற நண்பர் களாக வாழ வேண்டும் என்று மணவிழா உறுதி ஏற்பில் கூறுவதும், வாழ்த்தில் விளக்குவதும் இதன் அடிப்படையில்தான்!

நட்பு என்பது ஓர் கிடைத்தற்கரிய சொத்து. நமது வீட்டில் உள்ளவர்களை உறவுக்காரர்களாகப் பார்ப்பதைவிட நண்பர்களைப் போல் நெருங்கிப் பழகு வது இருசாரார் உள்ளத்திலும்கூட ஒரு புது உற்சாகத்தைப் புது வெள்ளம் பாய்வது போலக் கொண்டு வருமே!

ஆனால், நண்பர்களில் பல ரகம் உண்டு. அதில் தான் தெளிவுடன் இருக்க வேண்டும்.

சிலர் காரியவாதிகளாக நம்மிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து - லாபம் கருதிப் பழகுவார்கள்; உயிரையே தருகிறார் இவர் எனக்காக என்று அவ சரப்பட்டுக் கூறும் சில அவசர சாமி களுக்கு திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் எச்சரிக்கையை நகைச்சுவைத் தேனில் குழைத்துக் கூட்டங்களில் தருவார் - நல்ல அனுபவப் பாடம்.

காலை 10 மணிக்குப் பார்த்து, 12 மணிக்குள் எனக்காக உசரையே தரும் அளவுக்கு என் நண்பர் வந்து விட்டானே என்று நீ சொன்னால் அவன் அடுத்த 2 மணிக்கு உன் உசரையே எடுக்கப் போகிறான் என்பதை மனிதர்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்பார்!

எவ்வளவு சரியான அனுபவ அறிவுரை அது! எதிலும் எடை போடுவதிலும் நிதானம் தேவை - அதுதான் பிறகு - நமக்கு நிம்மதியைத் தரும்!

சில நண்பர்கள் வெகு சாதுர்யமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து காரிய சாதிப்பாளராக இருப்பார்கள்.

முதல் முறை பார்க்கும் போது பரிந் துரை உதவிகளைக் கேட்க மாட்டார்கள்.

முதலில் பழம், வரிசைகள் இத்தியாதி.

கொடுத்து விட்டு நலம் விசாரித்து மட்டும் விடை பெறுவார்கள். என்னங்க எதற்கு வந்தீங்க. என்ன சேதி சொல் லுங்க என்றால் அதெல்லாம் ஒண்ணு மில்லீங்க, உங்க நலம் விசாரிச்சிட்டுப் போகத்தான் வந்தேன் என்று சொல்லிப் போய் விடுவார்கள்! பிறகு ஒரு இடை வெளி விட்டு, மீண்டும் வந்து பரிந்துரை வேண்டுவர்!

ஆம், மனோதத்துவம் புரிந்த நண் பர்கள்!

எதையோ எதிர்பார்த்து வெகு காலம் பழகியிருந்து, பலன் முழுமையும் சுவைத்து விட்டு, கடைசியில் மேலும் விரும்பியதைப் பெற்றுத் தரவில்லை நாம் என்றவுடன் அவர்கள்,

தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளவர்களாகி விடுவார்கள்!

அற்றகுளத்து அறுநீர்ப் பறவைகள் போன்ற நண்பர்களைத்தான் அனை வரும் அறிவார்களே - அதுபற்றி விளக்கம் தேவையில்லை!

நண்பர்களைவிட நாம் அடையாளம் காணும்போது, அதற்கு சரியான அளவுகோல் - உரைகல் என்ன தெரி யுமா?

ஒன்று அவருக்கு நம்மால் கிடைத்த போது அவர் காட்டும் நன்றியோ, விசுவாசமோ அல்ல.

நாம் முயன்றும் அது அவருக்குக் கிடைக்காத நிலையிலும், தொடர்ந்து நம்மிடம் நன்றி விசுவாசம் காட்டு கிறார்களே, அவர்கள்தான் கிடைத்தற் கரிய கிழக்குத் திசைகள்! (சூரிய வெளிச்சம்) - இவர்களை கிழப்பருவத் திலும்கூட நம்பலாம் - மனந்திறக்க லாம்.

பாரத்தை இறக்கி வைக்கலாம்.

மனிதர்களை அவர்களின் அரிய சாதனைகளுக்காக பாராட்டுதல், வாழ்த்துதல் மிகவும் அவசியமாகும். அவர்களை அது ஊக்கப்படுத்தும், உற்சாகமூட்டும். மேலும் உழைக்கும் ஆர்வத்தை அவர்களுக்கிடையே தூண்டும்; அது அவர்களுக்கு மட்டு மல்ல; அவர்களது அரிய சாதனைகள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்  - எழுத்து, பேச்சு, செயல் எவ்வாறாயினும் - சமூகத்திற்கும்கூட அது வாய்ப்பாக அமையும்!

பாராட்ட வேண்டும் என்று நினைத்தால், உடனே பாராட்டி விடுங்கள்; தாமதியாதீர்கள் - பிறகு உங்கள் மனம்கூட மாறிவிடக் கூடும் என்பார் தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியார் அவர்கள்.

முன்பு, இரண்டு மாடிகள் ஏறி வந்து, அறிஞர் அண்ணா விடுதலை ஆசிரியராக ஈரோட்டில் இருந்து எழுதிய ஓர் தலையங்கத்திற்காக தந்தை பெரியார், மூச்சிறைக்கப் பாராட்டியது கண்டு அண்ணா இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இது வரலாறு.

நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன் றத்தில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் அவர்கள்மீது கோர்ட் அவமதிப்பு (Contempt of Court) வழக்குப் போடப்பட்டு தண்டிக்கப்பட்டதையொட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்ஜாதி நீதிபதிகள் என்பவர்கள் ஊழல் புரிந்ததை யொட்டி எழுந்த விமர்சனங்களைத் திரட்டி, திராவிடர்கள் - நீதிபதி களாகவோ, நிர்வாகஸ்தர்களாகவோ இருந்தால் மட்டும் அவர்களை வலிந்து சிறுசிறு தவறுகளையோ, அல்லது தவறுகள் நடந்ததாக கற்பனையாலேயோ, எழுதி சங்கடப்படுத்தும் பல்வகை வழக்கு ஆதாரங்களுடன் எழுதினேன் அப்போது நான் சென்னை சட்டக் கல்லூரியில் B.L. வகுப்பில் படித்து வரும் மாணவன்.

சென்னையில் அதை அய்யாவிடம் காட்டினேன். விடுதலையில் போடுவ தற்காக எழுதியுள்ளேன் அய்யா என்று கூறினேன்.

முழுவதும் படித்துப் பார்த்தார்கள்; இறுதியாக அதைப் பாராட்டி விட்டு, இந்தக் கட்டுரையை உன் பெயரில் போட வேண்டாம்; உனக்கு ஏதாவது தொல்லைகள் வரலாம்; அதோடு, அந்த மேட்டருக்கு உரிய வெயிட் உன் பெயரில் வந்தால் அவ்வளவு வராது. ஆகவேதான் என் பெயரிலேயே போடுமாறு விடுதலை அலுவலகத்திற்குக் கூறு கிறேன் என்றார்கள்.

எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஆகா தாராளமாகச் செய்யுங்கள் அய்யா என்று கூறி வந்துவிட்டேன்.

மாலை விடுதலையில் அய்யாவின் அறிக்கையாக அது வெளி வந்தது! சென்னை மீரான் சாயபுத் தெரு, இல் லத்தில் தங்கியிருந்த தந்தை பெரியார் அவர்களுக்குப் பலர் நேரில் வந்து பாராட்டுக்களைக் கூறினார்கள்.

அந்த அறிக்கைகாக!

அவர்களில் ஒரு குழுவினர் - இயக்கத்தவர்கள்தான் வேலூரிலிருந்து வந்தவர்கள் - அய்யாவின் இந்த அறிக்கை மிகப் பிரமாதம் அங்குள்ள வக்கீல்கள், நீதிக் கோர்ட் நியாயாதி பதிகள் எல்லோரும் எங்களிடத்தில் விசாரித்தார்கள்; விடுதலை பேப்பர் கிடைக்குமா என்று கேட்டு நச்சரித்தனர் என்று கூறி அய்யா ஒருவரால்தான் இப்படிப்பட்ட துணிச்சல் மிகுந்த, தெளிவு பொதிந்த, அறிக்கைகளைத் தர முடியும் என்று சரமாரி புகழ்ந்தார்கள்!

பொறுமையாக இதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, அய்யா அவர்கள் கடைசியாக, உங்களுக் கெல்லாம் ஒரு சேதி தெரியுமா? அந்த அறிக்கை நான் எழுதியதில்லை; நம்ம வீரமணி இருக் கிறாரே அவர் சட்டக் கல்லூரியில் B.L. படிக்கிறார். அவர் தான் எழுதினார் - இந்தப் பாராட்டு, உண்மையில் என்னைச் சேராது அவரைத்தான் சேரும் என்றார்.

வந்தவர்களுக்கு அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி (தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றி கசப்பு கொண்டிருந் தவர்கள்தான் அதில் சிலர் - அய்யா வுக்கும் கூட இது தெரியும் - தெரிந்தே சொன்னார்!)

தந்தை பெரியாரின் அறிவு நாண யம் எப்படிப்பட்டது பார்த்தீர்களா?

பிறர் பாராட்டும்போதுகூட அது யாருக்கு உரியது என்பதைக் கூறி, அதை ஏற்க மறுப்பதற்கு எத்தனை பெரிய   உள்ளம் பார்த்தீர்களா?

எனவே பாராட்டில் நிதானமும் வேண்டும் - பொய்யுரைகளைத் தவிர்த் தலும் அவசியம்! நாணயத்துடன் அது அமைந்தால் பொன்மலருடன், மணமும் சேர்ந்த பெருமையாகும்!

நேற்று (9.5.2013) மாலை கலைஞர் தொலைக்காட்சி, செய்தியில் ஒரு புதுமையான அறிவியல் - மருத்துவ இயல் சாதனை சீனாவில் நிகழ்ந்துள் ளதைக்  கூறினார்கள்.

மனித குலத்தின் வருங்கால வாழ்வுக்கும் வளத்திற்கும் பயன்பட வேண்டிய அற்புதமான சாதனை - அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற கற்பனைக் கதைகளைத்தான் நாம் இதுவரைக் கேட்டு வந்தோம்!

அறிவியல் தொழில்நுட்பம் - மருத் துவத் துறையில் மிக அற்புதமான, வளர்ச்சிக்குரிய புதுயுக சாதனை களைச் செய்து நாளும் புதுமை சேர்த்து வருகிறது!

ஆதி மனிதனுக்கு வேட்டையாடத் தான் தெரியும்; மிருகங்கள் தாக்கிய போது அவன் ரத்தம் சிந்தி மரண மடையும் நிலைதான் - துவக்கத்தில்.

ஆனால் மனித ரத்தம் இப்படி, பயனற்று சிந்தப்படுவதும் உண்டு. (இன்றும் வன்முறை வெறியாட்டங் களில் சிந்தும் ரத்தமும் - ஜாதிக் கலவரம், மதக் கலவரம் - ஜாதிக்கலவரங்கள், பயங் கரவாதக் கலகங்கள் மூலம் சிந்தப்படும் ரத்தமும் - மிக அதிகம் தான்).

என்றாலும் மருத்துவத் துறையில் தொழில் நுட்பம் புகுந்ததின் விளைவாக, ரத்ததானம், ரத்த சேமிப்பு வங்கி கண்டுபிடிக்கப்பட்டு, ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு ரத்ததானம் - குருதிக் கொடை - மூலம் தரப்படுகின்றன.

உயிர்களைக் காப்பாற்றும் அரிய தொண்டறம் அல்லவா இது!

அதன்பிறகு மனித உறுப்புக்களைக் கொடையாக வழங்கும் - கண்தானம் பரவலாக ஏற்பட்டு வருகிறது!
செத்தவர் இதன்மூலம் வாழுபவராக வாழ்கிறார் என்பதில்தான் எத்தனை கொள்ளை மகிழ்ச்சி!

இதற்கென கண்கள் சேமிப்பு வங்கிகள் (Eye-Bank) உருவாக்கப்பட் டுள்ளன.

சிறிய மருத்துவமனைகளில் இவை போன்றவைகளைச் சேகரித்து வைக்க முடியா விட்டாலும் அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளின் ரத்த வங்கி, கண் வங்கிகளுக்கு அனுப்பி வைத்து விடுகின் றனர்.

உடலுறுப்புக் கொடையும் அண்மை யில் தாராளமாக, ஏராளமாக மக்களின் இதயங்களில் அன்பு நதிகள் ஓடுகின்ற காரணத்தில், மகிழ்ச்சியும் அளித்து மன நிறைவு கொள்ளுகின்றனர்!

தந்தை பெரியார் அவர்களின் கடைசிப் பொதுக் கூட்டம் 19.12.1973 சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது. அப்போது வேனில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில், அய்யா அவர்களின் அந்நாளில் வந்த Illustrated Weekly of India-வில்  ஒரு புதுமையான செய்தியை படித்துக் காட்டினேன்.

மனிதனின் விந்துவைச் சேகரித்துப் பிறகு பயன்படுத்தும் வகையில் (Seman Bank) விந்து வங்கியை ஏற்படுத்தி, பாதுகாப்பாக வைக்கும் முறை செயல்படத் துவங்கியுள்ளது - அறிவியலின் மற் றொரு அற்புதமான மருத்துவ தொழில் நுட்பச் சாதனை என்பதைக் கேட்ட தந்தை பெரியார் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார்!

ஒருவன் விபத்துக்குள்ளான போதி லும் கூட மரணமுற்றாலும்கூட - அவ னது விந்துவை இன்செக்ஷன் செய்து, அவனுக்கே குழந்தை அவன் மனைவி மூலமோ, அல்லது வாடகைத் தாய் மூலமோ பிறக்க வைக்க முடியும்; இதை 10 ஆண்டுகள் வரை பாதுகாக்கலாம் என்ற குறிப்பும் இருந்தது!

இதைப்பற்றி அவரது தியாகராயர் நகர் பேருரையில் குறிப்பிட்டு மகிழ்ந் தார்கள்!

தாய்ப்பால் தான் குழந்தைகளின் ஊட்டத்திற்கு மிகவும் அவசியம்.  பல குழந்தைகள் தகுந்த ஊட்டச்சத்து இல்லாததால் நலிவுற்ற நிலையில் சீனாவில் இருப்பதை அறிந்து அங் குள்ள அரசு - சுமார் 2000 கோடி அமெரிக்க டாலர் செலவில், தாய்ப் பால் சேகரிப்பு வங்கி ஒன்றை நிறுவியுள்ளார்களாம்!

ஒரு தாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு போத்தலில் தூய்மையாக லாவகமாக கைபடாமல்  கறந்து சேமித்து பாதுகாத்து, ஊட்டமில்லாத குழந்தைகளுக்குத் தரும் ஏற்பாடாம்!

என்னே அறிவியலின் விந்தை - மனித குல வரலாற்றில் இது மாபெரும் கண்டுபிடிப்பு, ஏற்பாடு மட்டுமல்ல - தலைசிறந்த தொண்டறமும் ஆகும்!

சுரந்த பாலை வீணாக்காமல், தாயும் நலத்துடன் வாழ இது உதவிடக் கூடும். இம்முயற்சியின் மூலம் மற்ற நாடுகளுக்கு சீனா வழிகாட்டியுள்ளது!

கறந்த பால் முலைபுகா
கடைந்தவெண்ணெய் மோர்புகா

- என்று சித்தர்கள் பாடினார்கள்.

தாயின் முலைப்பால் பல குழந்தை களைக் காப்பாற்றிடப் பயன்படும்போது தாய்மையே தனிச் சிறப்பல்லவா பெறுகிறது?

வரலாற்றுப் பேராசிரியர், பேரறிஞர் டாக்டர் ந.சுப்ரமணியன் அவர்களது புதிய புத்தகமான உரத்த சிந்தனைபற்றி நேற்று எழுதியிருந்தோம்.

சுதந்திர சிந்தனையாளரும், 98 வயதிலும் துணிவுடன் எவர் புகழ்வார், எவர் இகழ்வார் என்று கவலைப்படாமல் சுயசிந்தனைகளின் உலைக்கூட சம்மட்டி யாக நொறுக்கித் தள்ளும் இவரது இந் நூல் ஒரு பிரச்சினைக்குரியதாக இருக்கும்.

தின்றதையே தின்று தெவிட்டாமல், இது ஒரு புதிய நோக்கு; அரிய போக்கு என்றால், அது மிகையல்ல.
மற்ற நூல்கள் பல ஒப்பனைகள் - ஒப்புக்காகத் தீட்டப்பட்ட ஓவியங்கள்.

இவருடையதோ தந்தை பெரியார் பாணியில் எக்ஸ்ரே பார்வை - தனித்தன் மையான தகத்தகாய கருத்து ஒளியுடன் உள்ள நூலாகும்!

தமிழ் இலக்கியங்கள், இலக்கிய கர்த்தாக்கள் பற்றியெல்லாம் கூட வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கூறும் ஆணி அடித்த கருத்துக்கள்!

எடுத்துக்காட்டாக சில:

இந்நூல் பக்கம் 35 முதல் 38 வரை

கேள்வி கேட்ட வானொலி நிலைய அதிகாரி ஸ்டாலின்: இப்படிப்பட்ட மிகப் பெரிய ஒரு தமிழ் இலக்கியப் படைப்பு, மத சம்பந்தமான வேலைகளுக்கு இங்கே வந்த பெஸ்கி என்ற வீரமாமுனிவர், ஜி.யு.போப் இவங்களையெல்லாம் அது கவர்ந்திருக்கிறது. இன்னும் ஆல்பெர்ட் சுவிட்சர் போன்ற அறிஞர்களையெல்லாம் அந்த நூல் கவர்ந்திருக்கு.

சுப்ரமண்யன்: ஆமா... வள்ளுவர் எந்த சமுதாயத்துக்குப் பேசியிருக்கிறார். ஏன் இதையெல்லாம் சொல்லவேண்டிய அவ சியம் அவருக்கு...

ஸ்டாலின்: அது ஒரு முக்கியமான... வாட் ஈஸ் தி நெசசிட்டி.

சுப்ரமண்யன்: திருடாதே, திருடாதே என்று எந்த சமுதாயத்துக்குச் சொல்ல வேண்டும்? திருடிக்கொண்டே இருக்கிற சமுதாயத்திற்குச் சொல்லவேண்டும்.

ஸ்டாலின்: அப்ப கள்ளுண்டு...

சுப்ரமண்யன்: ஆ... கள்ளுண்ணுதலி லேயே மூழ்கிப் போய் இருப்பவனுக்குச் சொல்லவேண்டும், அப்பா, கள்ளுண்டு மயங்கிப் போய்ப் பாவம் பண்ணிக் கொண்டே இருக்கிறாயே, அதை நிறுத்து என்று சொல்லுகிறார். நேரடியாகக் கண் டவர் சொல்லுகிறார். அது சங்க காலத்தில்.

இந்த கபிலர் என்னும் பிராம்மணப் புலவர், கள்ளுக் குடித்திருக்கிறார். மாமி சம் சாப்பிட்டிருக்கிறார். அவர் தான் கள் ளுண்டதையே வெளிப்படையாகச் சொல் லுகிறார். என்ன தவறு வந்துவிட்டது? வள்ளுவர்தான் சொல்லுகிறாரே, நான் இத்தனையும் சொல்லுகிறேன். இப்படி நடக்க முடியும் என்று நான் சொல்ல வில்லை, ஒத்துக்கொள்ளுகிறாரே.

ஸ்டாலின்: எப்படி?

சுப்ரமண்யன்: இயலாது என்று அவரே சொல்லுகிறாரே, சொல்லுவது சுலபம். செய்வது கடினம் என்றால், என்ன அர்த்தம். நான் சும்மா சொல்லிவிட்டுப் போகிறேன். இதுபடி நீங்க நடக்க முடியாது என்றுதானே பொருள். அவரே ஏற்றுக் கொள்கிறாரே அதை.

ஸ்டாலின்: இந்தக் கருத்தை இப்படி எடுத்துக்கிட்டுதான் நிறைய பேரு...

சுப்ரமண்யன்: இதைச் சொல்லவேண் டியது என்னுடைய கடமை. சொல்லி விட்டேன். நடக்க முடியுமானால் நடங்கள், அவ்வளவுதான்.

ஸ்டாலின்: இதை கிரேன்டடா எடுத் துக்கிட்டு, திருக்குறளைப் பற்றி ஓகோ, ஆகான்னு சொல்லிட்டு, இறங்கிப் போன பிறகு, அதை சொன்னதுக்கு மாறா சில பேரு செய்யலாமே, நடக்கலாமே.

சுப்ரமண்யன்: இந்த நூலில் சொன்ன ஒரு விதியைக் கொண்டு வாழ்க்கையை நடத்திவிட முடியாது. வரலாறு என்பது வேறு; அறங்கூறுதல் என்பது வேறு.

ஆத்திச்சூடி எல்லாம் அறம் செய விரும்பு, அறஞ்செய்ய விருப்பம் இருக்கிற தய்யா, எப்படி செய்யறது? கையில் இருந்தாதானே கொடுக்க. நானே ஒரு பிச்சைக்காரன். எவனுக்கு போடறது? ஒரு பிச்சைக்காரனைக் கூப்பிட்டு, நீ அறஞ்செய விரும்பு என்றால், அது... அவன் எங்க போவான். இதையே, இந்த மாதிரி பேசுகிறது சில பேருடைய பழக்கம். அவர் யார்? வள்ளுவர்.

ஆங்கில இலக்கியத்திலேயும் உண்டு. தமிழர்கள்தான் பெரிதுபடுத்திக் கொண் டிருக்கிறார்கள்.  இதை.
ஸ்டாலின்: இப்ப ஆங்கிலத்தில் கப் லெட்ஸ் உண்டுங்களா?

சுப்ரமண்யன்: வள்ளுவரைப் போலவே இதே நூலைப் போலவே ஆங்கில நூல் ஒன்று இருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், அந்த நூல் என்ன பெயர், அதன் ஆசிரியர் யார் என்பதை, என்னு டைய திருக்குறள் கட்டுரை முகவுரையில் எழுதியிருக்கிறேன். அந்த நூல் முப்பது, நாற்பது வருஷங்கள் பிரமாதமாக அடிபட்டி ருந்ததொரு காலத்தில், பிறகு அது முற்றிலும் மறக்கப்பட்டது.

ஸ்டாலின்: ஏன்?

சுப்ரமண்யன்: ஆ... இதுதான் பண் பாட்டு வேறுபாடு. இன்றைக்கும் தமிழர் கள் திருக்குறளின் ஒரு பிரதியை முன் னால் பிடித்துக்கொண்டு, பின்னால் இஷ்டம்போல் வாழ்வார்கள். ஆங்கிலே யர்கள் அப்படி செய்யவில்லை. அந்த அறநூலைக் கட்டி தூர வைத்துவிட்டு, நான் வாழ்க்கை எதற்கு இடம் கொடுக் கிறதோ, அப்படி வாழ்வேன் என்று வாழ்கி றார்கள்.

நம்முடைய வாழ்க்கையை மறைப்ப தற்கு ஒரு ஸ்கிரீன் திருக்குறள்.

ஸ்டாலின்: இப்ப ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலே, சேலம் நகராட்சியில், ராஜாஜி சேர்மனா இருந்தாரு. அப்போ ப்ரொகிபிஷனை இம்ப்ளிமென்ட் பண் ணாரு.

சுப்ரமண்யன்: இந்தியர்கள் செய்து கொண்ட எந்தக் காரியத்தையும், ஆங்கி லேயர்கள் தடுக்கவில்லை. அதுவும் முக் கியமாக, குவீன் விக்டோரியா வந்து, உங்களுடைய சமுதாய பழக்கவழக்கங் களில் நான் தலையிடுவதில்லை என்று கூறிய பிறகு, அவர்கள் இந்தியர்களின் காரியங்களில் தலையிடுவதில்லை. காரணம் 1857 இல் நடந்த கலகம்.

ஸ்டாலின்: சிப்பாய் கலகம்...

சுப்ரமண்யன்: அந்த கலகத்துக்குப் பிறகு, அவர்களும் தீர்மானித்து விட்டார் கள். இவர்கள் எப்படியோ வாழட்டும். எப்படி வாழ்ந்தால் நமக்கென்ன? என்று விட்டுவிட்டார்கள். அதாவது இந்த சமு தாயத்தைச் சீர்திருத்துகிற முறையெல் லாம் அவர்கள் கைவிட்டுவிட்டார்கள். நீங் களே எப்படி வேண்டுமானாலும் வாழுங்கள்.

ஆகவே, இவர்கள் விருப்பம்போல் வாழ ஆரம்பித்தார்கள்.

@@@@@@@@@

இந்நூல் பக்கம் 76 முதல் 80 வரை

ஸ்டாலின்: அய்ரோப்பாவில் தொழில் புரட்சி நடந்தது. பத்தொன்பதாம் நூற் றாண்டில்.

சுப்ரமண்யன்: எங்கே சொல்லுங்கோ.

ஸ்டாலின்: அய்ரோப்பாவில்.

சுப்ரமண்யன்: ஆ...ஆ... ஆமா.... தொழிற்புரட்சியா...

ஸ்டாலின்: ஆமா... அப்ப இந்த பிரிண் டிங் டெக்னாலஜி எல்லாம் அப்பதான் வந்தது.

சுப்ரமண்யன்: அ...

ஸ்டாலின்: அதே நேரத்திலதான். அமெரிக்கா ஒரு தனி சுதந்திர நாடாகவும் ஆச்சு. அப்போ அந்த நேரத்துல, அய்ரோப் பியன் லேங்க்வேஜ்ல மேற்கத்திய மொழி கள்ல நிறைய இலக்கியப் படைப்புக்க ளெல்லாம் நிறைய வந்திட்டிருந்தது.

சுப்ரமண்யன்: அ....

ஸ்டாலின்: கூட இந்த அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதுனால், ரொம்ப தீவிரமாக வளர்ச்சி அடைஞ்சுது. அதே சமயத்துலதான்,மேற்கத்திய செல் வாக்கு கல்கத்தாவில் மய்யங்கொண்டது. அதனுடைய விளைவா, கீதாஞ்சலி எல்லாம் வந்தது.

சுப்ரமணியன்: அ..அ...

@@@@@@@@@

ஸ்டாலின்: அத மாதிரி மேற்கத்திய தாக்கத்தினால, தமிழ்ல என்ன தரமான ஒரு இலக்கியப் படைப்பு வந்திருக்குது?

சுப்ரமணியன்: தொழிற்புரட்சி 18 ஆம் நூற்றாண்டு இறுதிக் காலத்தில் இங்கி லாந்தில் தோன்றியது. அதே, ஸ்டீம் லோக்கமேட்டிவ் அதுல ஆரம்பித்தது தொழிற்புரட்சி. ஆனால், பிரின்டிங்க் டெக் னாலஜி என்பது 15 ஆம் நூற்றாண்டி லேயே உண்டு.

காக்ஸ்டன் பிரின்டிங் 16 ஆம் நூற்றாண்டு. இரண்டு நூற்றாண் டுக்கு முன்னாலேயே பிரின்டிங் உண்டு. இந்தத் தொழிற்புரட்சிக்கு முன்னால. ஆகவே, அது தொழிற்புரட்சியினுடைய பகுதி அன்று பிரின்டிங் டெக்னாலஜி. அது முந்திப் போனது. தவிர, தொழிற்புரட்சி நடந்த அய்ரோப்பாவினுடைய பண்பாட்டுத் தாக்கம், இந்தியாவின் மீது, அதிகமாக இல்லை. தாக்கமில்லை.

அந்த தொழிற் புரட்சிக்குப் பின்பு இருக்கக்கூடிய மனப் பான்மை இருக்கிறதே, அதை இந்தியப் பண்பாடு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அதன்  வெளிப்படை சில வேஷங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அதற்கு உள்ளீடு கொஞ்சம்கூட, மாற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டிருக்கிறது. மனதார, தொழிற்புரட்சிக்குள் போகவில்லை அது.

தொழிற்புரட்சியினால் வரக்கூடிய சில.... இந்த சமுதாயப் பலன்கள் இருக்கின் றனவே, அவற்றை மட்டும் மேற்கொண் டது. டிரான்ஸ்போர்ட் முதலானவற்றா லெல்லாம் எடுக்கப்பட்ட பலன்.

ஸ்டாலின்: எஜுகேஷன்.....

சுப்ரமண்யன்: ஆமா. உதாரணமாக, வேகமாக ஓர் இடத்துக்குப் போக வேண்டு மானால், ஒரு டிரான்ஸ்போர்ட். மோட்டார் சைக்கிள்ல போலாம். ஆனால் அங்க மோட்டார் சைக்கிள்லே அவன் போய் என்ன காரியம் பண்ணுகிறான். மேனாட் டிலே... நம் நாட்டில் ஏறத்தாழ மோட்டார் சைக்கிள்ளயே பழைய புரோகிதர் அதிலயே வந்து இறங்குவார். இங்க வந்து அந்த வேகம் வந்திருச்சுன்னு சொல்லுவார். இந்த மேனாட்டுக் கருவிகள் இருக்கிறதே, அது எதுக்குவேண்ணாலும் பயன்படும்.

ஸ்டாலின்: யூனிவர்சிட்டி வந்துதே.....

சுப்ரமண்யன்: யுனிவர்சிட்டி வாயிலாக நீங்கள் பழைய கருத்துக்களையும் சொல் லிக்கொண்டே இருக்கலாம். இன்றைக்கு அதுதான் நடக்கிறது. புது கருத்துக் களையும் சொல்லலாம். நீங்க இங்கிலீஷ் லயும் பழைய கருத்துக்களை சொல்லலாம். தமிழிலயும் சொல்லலாம். அப்ப இங்கி லீஷ்ல யுனிவர்சிட்டின்னு பெயர் கொடுத்து, ஷர்ட்டைப் போட்டுக்கொண்டு, டை கட்டிக் கொண்டு போனால், தொப்பிக்குள்ளேயே என்ன இருக்கிறது என்றால், ஒரு ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கருத்துக்கள். அது வெளியே போகாமல் காப்பாற்றுகிறது.

ஸ்டாலின்: நீங்கள் கொறச்சு மதிப் பிடறீங்கன்னு நெனக்கறேன்.

சுப்ரமண்யன்: உண்மையாக மதிப்பிட் டால், கொஞ்சம் கொறச்சாப்போறது. உங்களுக்கு இஷ்டமானால் கொஞ்சம் மாத்திச் சொல்லலாம். அது ஆனால் உண்மையா  இருக்காது. தாகூருடைய மொத்த கவிதை, தொழிற்புரட்சிக்கு நேர்மாறா இருந்தது.

ஸ்டாலின்: மாடர்னிசத்துக்கு எகைன்ஸ்டானது.....

சுப்ரமண்யன்: நேர்மாறானது. இது..... மனிதன், இயற்கையை வெல்லுவதற்கு, இண்டஸ்ட்ரியல் ரெவலூஷன். தாகூரு டைய கவிதை முழுவதும், இயற்கையை அனுபவிப்பதற்கு, டு என்ஜாய் நேச்சர். அண்ட் நாட் டு மாஸ்டர் இட். இண்டஸ்ட் ரியல் ரெவலூஷன் ட்ரைஸ் டு மாஸ்டர் நேச்சர். தாகூர் ட்ரைஸ் டு அண்டர்ஸ் டாண்டிட். பிக்கம் பார்டாஃப் இட். அதுதான்.

இதற்கும் அதுக்கும் தொடர்பே கிடையாது. அதனால்தான் தாகூருக்கு அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும், பெரும் புகழ் ஏற்பட்டதற்கு காரணமே இதுதான். அவருடைய பாரம்பரியத்திலி ருந்து முற்றிலும் விலகிப்போய், இயற்கை யோடு ஒன்றாக சேர்ந்து போனாரே, எப்படி முடிந்தது என்பது அவருடைய வியப்பு. அது நமக்கும் உள்ள வியப்புதான். ஆனால் தாகூர் இன்னக்கி அதைச் சொல் லுகிறது. சங்க இலக்கியத்தை தமிழில் படித்தவனுக்கு ஒரு வியப்பும் தராது.

ஸ்டாலின்: ஏன்?

சுப்ரமண்யன்: ஏனென்றால் சங்க இலக்கியத்தில் இயற்கைதான் பேசப்பட்டி ருக்கிறது தமிழிலே. அவர் வங்காளியில் சொன்னதுபோல், தமிழில் சொல்லியி ருக்கிறார்கள். எனக்கு என்னுடைய தாய் மொழியான தமிழில் சொல்லப்படும்போது, அந்த இயற்கையோடு நானும் ஒன்றிப் போகிறேன்.

ஸ்டாலின்: அப்போ, மாடர்ன் ட்ரெண்ட்-னு சொல்றாங்...

சுப்ரமண்யன்: மாடர்னே இல்ல அது. இயற்கையை மாஸ்டர் பண்ணி, தனக்கு அடிமை ஆக்குவது. கலை என்பது மாடர்ன் ஆர்ட். நேச்சரை இழுத்துப் பிடித்து தனக்கு அடக்கி அதனால் வரும் பலன்களை தான் சமுதாயத்தில் பயன் படுத்த பாக்கறது மாடர்ன் இண்டஸ்ட்ரி யல்... அப்போ அதை போரடிக்கறது இருக்குது டிஸ்கஸ்டிங் (disgusting) ஃபெர்ட் அப் (fed up) வித் இட் அப் படீன்னு நெனக்கறவங்களுடைய மனப் பான்மை பாருங்கள்....

ஸ்டாலின்: விருப்புக்கும், சலிப்புக்கும் வித்யாசம் இருக்குது.

சுப்ரமண்யன்: சலிப்பு கொஞ்சம் மிகுந்தால் வெறுப்பாகும். சலிப்புதான் தொடக்கம். சுதந்திரன் என்று ஒருத்தன் சொல்லிக் கொண்டே இருப்பான். சுதந் தரமா இருந்து அதனால் தன்னால் முடிய வில்லையே என்று தெரிந்து, மறுபடியும் மற்றவர்களுடைய தயவுக்கு வருவான். ஆகவே, சுற்றிக் கொண்டுதான் இருக்கும் வாழ்க்கை.

@@@@@@@@@

ஸ்டாலின்: புதுசா உருவான அமெ ரிக்கால, நல்ல லிட்ரேச்சர், நல்ல ஆர்ட்டு, நல்ல..,.. விளைவுகள்லாம் வந்திருக்கே.

சுப்ரமண்யன்: இருக்கிறது.

ஸ்டாலின்: உலகப் புகழ்பெற்ற எழுத் தாளர்களெல்லாம் அங்க இருந்தாங்களே.

சுப்ரமண்யன்: தற்காலத்து க்ளாசிசி சம் என்பது, இடைக்காலத்துல, பழைய காலத்து கிளாசிசிசம்தான் அது. ஆனால் கிளாசிக்கசல்தான். அதே பழைய கிளா சிக்கலே, தற்காலத்து சூழ்நிலை பாதிப்பு னாலே, அது கொஞ்சம் மாறி இருக்கும். அவ்ளோதான். வேறொன்றுமில்லை. ஆனால், அந்த ஆர்ட்டினுடைய கருவிகள் இருக்கிறதே, அதனுடைய முடிவு எல்லாமே கிளாசிக்கலா இருக்கும். வேண்டுமென்றே பிறழ்ந்து போய்விட்டால், அப்பொழுது தான் ரொமான்டிக் வரும்.

அய்ரோப்பியனிசம், அமெரிக்கனிசம் என்பதெல்லாம், இந்தியனிசத்தினுடைய பகுதியாகவே முடியாது. இஸ்லாமிக், ஹிண்டு, மாடர்னிசத்த தடுக்கற சக்திகள், அதுல இஸ்லாம் வெளிப்படையாகத் தடுத்து சில சமயம் தோற்றுப்போகும். இந்து தர்மத்தினுடைய ஒரு தனிப்பட்ட சிறப்பு என்னவென்றால், தடுப்பது தெரியாமல் தடுத்து, தான் மறையாமல் நின்று, எப்பொழுதும்போல் இருந்து, வெளி வேஷம் மட்டும் மாடர்ன்போல் இருந்து, உள்ளூர் பழமையக் காப்பாற்றிக் கொண்டு இருப்பது.

ஸ்டாலின்: சர்வைவ் பண்றது.

சுப்ரமண்யன்: ஆம். ஆதாரமான பண்புகளையெல்லாம் விட்டுக் கொடுத்து விட்டார்கள். இப்ப அகம் புறம் என்ற வேறுபாடு இல்லாமல் போய்விட்டது. லவ், அண்ட் வார், அந்த ஹீராயிக் போய் விட்டது. அதைப் பார்க்கவே இல்லை.

இப்பொழுது புதிதாக ஒன்று வந்தது. அரசியல் என்று......

ஸ்டாலின்: அது இரண்டாம் உலகப் போருக்கு அப்புறம்..
சுப்ரமண்யன்: இல்ல.....அ...ஏன்? சுப்ரமணிய பாரதி எப்ப இறந்தார்? ரெண்டாவது உலகப்போருக்கு பிறகா?

ஸ்டாலின்: இல்ல.அதுக்கு முன்ன.

சுப்ரமண்யன்: முதல் உலகப்போருக்கு முன்னால...ஆ...பின்ன... சுப்பிரமணிய பாரதிதானே அரசியல்லபோய்... கவிதை... ஆகவே, இதெல்லாம் என்ன? கிளாசிக்கல் எடத்தில் வரப்பட்ட ஒரு போர்..தனக்கு...

ஸ்டாலின்: சலிப்பு....

சுப்ரமண்யன்: அ...சலிப்பு, அலுப்பு இதவிட்டுவிட்டு விலகி, வேறெங்கியாவது போலாம் என்று, அப்படி போனது, எங்கே போனார்கள். எங்கே போகிறோம் என்று தெரியாமலே ஒரு பாலைவனத்துக்குள் போய்க்கொண்டு.....

@@@@@@@@@

இந்நூல் பக்கம் 124

ஸ்டாலின்: நீங்க எத்தனை நூல்கள் எழுதி யிருக்கீங்க?

சுப்ரமண்யன்: நானா? அண்மையில் நானே ஒரு கணக்குப் போட்டுப் பார்த் தேன். கடைசி நூல். நூத்தி எழுபதாவது நூல். நூத்தி எழுபது நூல்கள் எழுதியிருக்கிறேன். அவற்றில், அறுபத்து மூன்று நூல்கள் ஆங்கிலத்திலெயும், மிச்சமெல்லாம் தமிழ்லெயும் எழுதியி ருக்கேன். தமிழ்லே எழுதின நூல்கள்லே பிறர்வாழ்க்கை வரலாறு, என் வாழ்க்கை வரலாறு, பழைய நூல்களினுடைய பதிப்பு உரையோடு, ஆராய்ச்சிக் கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள்

ஸ்டாலின்: ஓ.....க்ரியேட்டிவ் ரைட் டிங்கும்...

சுப்ரமண்யன்: இதெல்லாம் க்ரியேட் டிவ் ரைட்டிங்....நாடகங்கள், சிறுகதைகள் அப்பறம் க்ரியேட்டிவ் க்ரிட்டிசிசம், கவிதைகள். இதெல்லாம் க்ரியேட்டிவ் அதாவது, க்ரிடிக்கலாக எழுதினதெல்லாம் ஆராய்ச்சிக் கட்டுரைகள், மத்த நூலிலே பதிப்பித்ததெல்லாம்.

ஸ்டாலின்: நீங்க எப்ப பிறந்தீங்க? இப்ப என்ன வயசு?

சுப்ரமண்யன்: 1915 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆவது நாள் பிறந்தேன்.

@@@@@@@@@

வழக்கமாக படிக்கும் இலக்கிய ஆய்வுகளைவிட இது புதிய பார்வையுடன் அமைந்த நூல் - விவாதத்திற்கு வித்துகள்!

நமது வாழ்த்துகள் - இருவருக்கும்!

அண்மையில் அருமையானதொரு சுயசிந்தனையின் மலர்த்தோட்டமாக, எண்ண ஓட்டங்கள், ஜீவநதிபோல் பிரவாகம் எடுத்து ஓடிடும் ஓர் அற்புதமான நூல் கிடைக்கப் பெற்று படித்தோம் - சுவைத்தோம் - மகிழ்ந்தோம்!

எழுதியவர் முதிர்ந்த பேராசிரியர்; வரலாற்றுத் துறையில் துறைபோகிய நல்லாசான்; தமிழ் இலக்கியத்தைப் படித்து, ஆய்வு செய்து, எதிலும் தனித்தன்மையோடு கருத்துக் கூறும் தமிழறிஞர்; எல்லாவற்றையும்விட, மற்ற பற்றுகளை இல்லறத்திலிருந்து கொண்டே விட்டுவிட்டு, மனிதப்பற்று, வளர்ச்சி பற்று மட்டுமே முக்கியம் என்று கூறிய தந்தை பெரியார் அவர்களைப் போன்று, மனிதநேயப் பற்றாளர்!

99 வயதை நெருங்கும் வரலாற்றுப் பேராசிரியர், பேரறிஞர் டாக்டர் ந.சுப்ரமணியம் அவர்கள்!

இயற்கையை எதிர்த்து வெற்றி பெற்று வரும் இடையறாத கருத்தாளரான எழுத்தாளர் அவர்!

மதுரைப் பல்கலைக் கழகம், வடகிழக்கு கவுகாதி பல்கலைக் கழகங்களில் பணியாற்றி (வரலாற்றுத் துறைத் தலைவராக) ஓய்வு பெற்று உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து வருபவர்.

இன்றும் இந்த வயதிலும் தானே எழுதுகிறார்; தனித்தே சிந்திக்கிறார்!

உட்கார்ந்த இடத்தைவிட்டு அதிகம் எழுந்து நடமாட முடியவில்லை என்றாலும், மனோ வேகமோ என்று சொல்ல முடியாத வேகத்தில் செல்லும் நிலை!

இதில் முக்கால் வயதுள்ள பலருக்கும் இக்காலத்தில் மறதி நோய் - Alzheimer, Amnesia, Demenia - இப்படிப் பல வந்து குழந்தைகளைவிட மோசமான எடுத்து தடுத்து வழி நடத்தும் நிலையான பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஆனால், இவரோ, உரையாடும்போது காட்டும் உற்சாகம், எதையும் உள்வாங்கி பதில் கூறும் பாங்கு வியக்கத்தக்கது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவர்களை நாங்கள் குடும்பத்துடன் சென்று அளவளாவி, அன்பில் விளைந்த அமுதம் பருகி மகிழ்ச்சியுடன் திரும்புவோம்.

எங்கள் நட்பு ஒரு விசித்திர நட்பு!

தனித்த சிந்தனை உள்ளவர்களைக் காண்பது நம் நாட்டில் அரிது. படித்தவைகளை வாந்தி எடுப்பதுதான் கற்றறிந்த மேதை(?)களின் வாடிக்கை இங்கே! இவர்களோ அதற்கு முற்றிலும் விலக்கு.

எல்லாவற்றிலும் புத்தாக்க சிந்தனை, புதுப்புது கேள்விக் கணைகள் - உண்மைகளை பெரியார் பாணியில் சொல்லவேண்டுமானால் - அதன் நிர்வாணத் தன்மையில் எடுத்துரைப்பது.

அவர்களுடன் உரையாடினால் காலம் பறப்பதே தெரியாது!

கோவை வானொலியின் அதிகாரியாக இருந்த திரு.ஸ்டாலின் அவர்கள் இவர்களைப் பேட்டி கண்டு வாராவாரம் ஒலிப்பதிவினை ஒலிபரப்பினார்.

அற்புதமான நவில்தொறும் இலக்கியம் போன்று உரத்த சிந்தனை என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளிவந்துள்ளது. நேற்றுதான் எனக்குக் கிடைத்தது!

படிக்கப் படிக்க பல புதிய சிந்தனைச் சுரங்கத்தின் கருவூலத்திற்கு புகுந்து புதையல் கண்டெடுப்பதுபோல் உள்ளத்தில் இன்பத்தைப் பாய்ச்சியது.

உரத்த சிந்தனை என்று தலைப்பிட்டாலும்கூட உயரிய சுயசிந்தனைப் பூக்காடு அது!

வாழ்வியல் பாடங்கள்! வைகறை வெளிச்சங்கள்!!

நாளை ஒரு சில பகுதிகளைப் பார்ப்போமா!