வியாழன், 09 மே 2013 15:39

வரலாற்றுப் பேராசிரியர், பேரறிஞர் டாக்டர் ந.சுப்ரமணியன் அவர்களது புதிய புத்தகமான உரத்த சிந்தனைபற்றி நேற்று எழுதியிருந்தோம்.
சுதந்திர சிந்தனையாளரும், 98 வயதிலும் துணிவுடன் எவர் புகழ்வார், எவர் இகழ்வார் என்று கவலைப்படாமல் சுயசிந்தனைகளின் உலைக்கூட சம்மட்டி யாக நொறுக்கித் தள்ளும் இவரது இந் நூல் ஒரு பிரச்சினைக்குரியதாக இருக்கும்.
தின்றதையே தின்று தெவிட்டாமல், இது ஒரு புதிய நோக்கு; அரிய போக்கு என்றால், அது மிகையல்ல.
மற்ற நூல்கள் பல ஒப்பனைகள் - ஒப்புக்காகத் தீட்டப்பட்ட ஓவியங்கள்.
இவருடையதோ தந்தை பெரியார் பாணியில் எக்ஸ்ரே பார்வை - தனித்தன் மையான தகத்தகாய கருத்து ஒளியுடன் உள்ள நூலாகும்!
தமிழ் இலக்கியங்கள், இலக்கிய கர்த்தாக்கள் பற்றியெல்லாம் கூட வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கூறும் ஆணி அடித்த கருத்துக்கள்!
எடுத்துக்காட்டாக சில:
இந்நூல் பக்கம் 35 முதல் 38 வரை
கேள்வி கேட்ட வானொலி நிலைய அதிகாரி ஸ்டாலின்: இப்படிப்பட்ட மிகப் பெரிய ஒரு தமிழ் இலக்கியப் படைப்பு, மத சம்பந்தமான வேலைகளுக்கு இங்கே வந்த பெஸ்கி என்ற வீரமாமுனிவர், ஜி.யு.போப் இவங்களையெல்லாம் அது கவர்ந்திருக்கிறது. இன்னும் ஆல்பெர்ட் சுவிட்சர் போன்ற அறிஞர்களையெல்லாம் அந்த நூல் கவர்ந்திருக்கு.
சுப்ரமண்யன்: ஆமா... வள்ளுவர் எந்த சமுதாயத்துக்குப் பேசியிருக்கிறார். ஏன் இதையெல்லாம் சொல்லவேண்டிய அவ சியம் அவருக்கு...
ஸ்டாலின்: அது ஒரு முக்கியமான... வாட் ஈஸ் தி நெசசிட்டி.
சுப்ரமண்யன்: திருடாதே, திருடாதே என்று எந்த சமுதாயத்துக்குச் சொல்ல வேண்டும்? திருடிக்கொண்டே இருக்கிற சமுதாயத்திற்குச் சொல்லவேண்டும்.
ஸ்டாலின்: அப்ப கள்ளுண்டு...
சுப்ரமண்யன்: ஆ... கள்ளுண்ணுதலி லேயே மூழ்கிப் போய் இருப்பவனுக்குச் சொல்லவேண்டும், அப்பா, கள்ளுண்டு மயங்கிப் போய்ப் பாவம் பண்ணிக் கொண்டே இருக்கிறாயே, அதை நிறுத்து என்று சொல்லுகிறார். நேரடியாகக் கண் டவர் சொல்லுகிறார். அது சங்க காலத்தில்.
இந்த கபிலர் என்னும் பிராம்மணப் புலவர், கள்ளுக் குடித்திருக்கிறார். மாமி சம் சாப்பிட்டிருக்கிறார். அவர் தான் கள் ளுண்டதையே வெளிப்படையாகச் சொல் லுகிறார். என்ன தவறு வந்துவிட்டது? வள்ளுவர்தான் சொல்லுகிறாரே, நான் இத்தனையும் சொல்லுகிறேன். இப்படி நடக்க முடியும் என்று நான் சொல்ல வில்லை, ஒத்துக்கொள்ளுகிறாரே.
ஸ்டாலின்: எப்படி?
சுப்ரமண்யன்: இயலாது என்று அவரே சொல்லுகிறாரே, சொல்லுவது சுலபம். செய்வது கடினம் என்றால், என்ன அர்த்தம். நான் சும்மா சொல்லிவிட்டுப் போகிறேன். இதுபடி நீங்க நடக்க முடியாது என்றுதானே பொருள். அவரே ஏற்றுக் கொள்கிறாரே அதை.
ஸ்டாலின்: இந்தக் கருத்தை இப்படி எடுத்துக்கிட்டுதான் நிறைய பேரு...
சுப்ரமண்யன்: இதைச் சொல்லவேண் டியது என்னுடைய கடமை. சொல்லி விட்டேன். நடக்க முடியுமானால் நடங்கள், அவ்வளவுதான்.
ஸ்டாலின்: இதை கிரேன்டடா எடுத் துக்கிட்டு, திருக்குறளைப் பற்றி ஓகோ, ஆகான்னு சொல்லிட்டு, இறங்கிப் போன பிறகு, அதை சொன்னதுக்கு மாறா சில பேரு செய்யலாமே, நடக்கலாமே.
சுப்ரமண்யன்: இந்த நூலில் சொன்ன ஒரு விதியைக் கொண்டு வாழ்க்கையை நடத்திவிட முடியாது. வரலாறு என்பது வேறு; அறங்கூறுதல் என்பது வேறு.
ஆத்திச்சூடி எல்லாம் அறம் செய விரும்பு, அறஞ்செய்ய விருப்பம் இருக்கிற தய்யா, எப்படி செய்யறது? கையில் இருந்தாதானே கொடுக்க. நானே ஒரு பிச்சைக்காரன். எவனுக்கு போடறது? ஒரு பிச்சைக்காரனைக் கூப்பிட்டு, நீ அறஞ்செய விரும்பு என்றால், அது... அவன் எங்க போவான். இதையே, இந்த மாதிரி பேசுகிறது சில பேருடைய பழக்கம். அவர் யார்? வள்ளுவர்.
ஆங்கில இலக்கியத்திலேயும் உண்டு. தமிழர்கள்தான் பெரிதுபடுத்திக் கொண் டிருக்கிறார்கள். இதை.
ஸ்டாலின்: இப்ப ஆங்கிலத்தில் கப் லெட்ஸ் உண்டுங்களா?
சுப்ரமண்யன்: வள்ளுவரைப் போலவே இதே நூலைப் போலவே ஆங்கில நூல் ஒன்று இருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், அந்த நூல் என்ன பெயர், அதன் ஆசிரியர் யார் என்பதை, என்னு டைய திருக்குறள் கட்டுரை முகவுரையில் எழுதியிருக்கிறேன். அந்த நூல் முப்பது, நாற்பது வருஷங்கள் பிரமாதமாக அடிபட்டி ருந்ததொரு காலத்தில், பிறகு அது முற்றிலும் மறக்கப்பட்டது.
ஸ்டாலின்: ஏன்?
சுப்ரமண்யன்: ஆ... இதுதான் பண் பாட்டு வேறுபாடு. இன்றைக்கும் தமிழர் கள் திருக்குறளின் ஒரு பிரதியை முன் னால் பிடித்துக்கொண்டு, பின்னால் இஷ்டம்போல் வாழ்வார்கள். ஆங்கிலே யர்கள் அப்படி செய்யவில்லை. அந்த அறநூலைக் கட்டி தூர வைத்துவிட்டு, நான் வாழ்க்கை எதற்கு இடம் கொடுக் கிறதோ, அப்படி வாழ்வேன் என்று வாழ்கி றார்கள்.
நம்முடைய வாழ்க்கையை மறைப்ப தற்கு ஒரு ஸ்கிரீன் திருக்குறள்.
ஸ்டாலின்: இப்ப ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலே, சேலம் நகராட்சியில், ராஜாஜி சேர்மனா இருந்தாரு. அப்போ ப்ரொகிபிஷனை இம்ப்ளிமென்ட் பண் ணாரு.
சுப்ரமண்யன்: இந்தியர்கள் செய்து கொண்ட எந்தக் காரியத்தையும், ஆங்கி லேயர்கள் தடுக்கவில்லை. அதுவும் முக் கியமாக, குவீன் விக்டோரியா வந்து, உங்களுடைய சமுதாய பழக்கவழக்கங் களில் நான் தலையிடுவதில்லை என்று கூறிய பிறகு, அவர்கள் இந்தியர்களின் காரியங்களில் தலையிடுவதில்லை. காரணம் 1857 இல் நடந்த கலகம்.
ஸ்டாலின்: சிப்பாய் கலகம்...
சுப்ரமண்யன்: அந்த கலகத்துக்குப் பிறகு, அவர்களும் தீர்மானித்து விட்டார் கள். இவர்கள் எப்படியோ வாழட்டும். எப்படி வாழ்ந்தால் நமக்கென்ன? என்று விட்டுவிட்டார்கள். அதாவது இந்த சமு தாயத்தைச் சீர்திருத்துகிற முறையெல் லாம் அவர்கள் கைவிட்டுவிட்டார்கள். நீங் களே எப்படி வேண்டுமானாலும் வாழுங்கள்.
ஆகவே, இவர்கள் விருப்பம்போல் வாழ ஆரம்பித்தார்கள்.
@@@@@@@@@
இந்நூல் பக்கம் 76 முதல் 80 வரை
ஸ்டாலின்: அய்ரோப்பாவில் தொழில் புரட்சி நடந்தது. பத்தொன்பதாம் நூற் றாண்டில்.
சுப்ரமண்யன்: எங்கே சொல்லுங்கோ.
ஸ்டாலின்: அய்ரோப்பாவில்.
சுப்ரமண்யன்: ஆ...ஆ... ஆமா.... தொழிற்புரட்சியா...
ஸ்டாலின்: ஆமா... அப்ப இந்த பிரிண் டிங் டெக்னாலஜி எல்லாம் அப்பதான் வந்தது.
சுப்ரமண்யன்: அ...
ஸ்டாலின்: அதே நேரத்திலதான். அமெரிக்கா ஒரு தனி சுதந்திர நாடாகவும் ஆச்சு. அப்போ அந்த நேரத்துல, அய்ரோப் பியன் லேங்க்வேஜ்ல மேற்கத்திய மொழி கள்ல நிறைய இலக்கியப் படைப்புக்க ளெல்லாம் நிறைய வந்திட்டிருந்தது.
சுப்ரமண்யன்: அ....
ஸ்டாலின்: கூட இந்த அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதுனால், ரொம்ப தீவிரமாக வளர்ச்சி அடைஞ்சுது. அதே சமயத்துலதான்,மேற்கத்திய செல் வாக்கு கல்கத்தாவில் மய்யங்கொண்டது. அதனுடைய விளைவா, கீதாஞ்சலி எல்லாம் வந்தது.
சுப்ரமணியன்: அ..அ...
@@@@@@@@@
ஸ்டாலின்: அத மாதிரி மேற்கத்திய தாக்கத்தினால, தமிழ்ல என்ன தரமான ஒரு இலக்கியப் படைப்பு வந்திருக்குது?
சுப்ரமணியன்: தொழிற்புரட்சி 18 ஆம் நூற்றாண்டு இறுதிக் காலத்தில் இங்கி லாந்தில் தோன்றியது. அதே, ஸ்டீம் லோக்கமேட்டிவ் அதுல ஆரம்பித்தது தொழிற்புரட்சி. ஆனால், பிரின்டிங்க் டெக் னாலஜி என்பது 15 ஆம் நூற்றாண்டி லேயே உண்டு.
காக்ஸ்டன் பிரின்டிங் 16 ஆம் நூற்றாண்டு. இரண்டு நூற்றாண் டுக்கு முன்னாலேயே பிரின்டிங் உண்டு. இந்தத் தொழிற்புரட்சிக்கு முன்னால. ஆகவே, அது தொழிற்புரட்சியினுடைய பகுதி அன்று பிரின்டிங் டெக்னாலஜி. அது முந்திப் போனது. தவிர, தொழிற்புரட்சி நடந்த அய்ரோப்பாவினுடைய பண்பாட்டுத் தாக்கம், இந்தியாவின் மீது, அதிகமாக இல்லை. தாக்கமில்லை.
அந்த தொழிற் புரட்சிக்குப் பின்பு இருக்கக்கூடிய மனப் பான்மை இருக்கிறதே, அதை இந்தியப் பண்பாடு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அதன் வெளிப்படை சில வேஷங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அதற்கு உள்ளீடு கொஞ்சம்கூட, மாற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டிருக்கிறது. மனதார, தொழிற்புரட்சிக்குள் போகவில்லை அது.
தொழிற்புரட்சியினால் வரக்கூடிய சில.... இந்த சமுதாயப் பலன்கள் இருக்கின் றனவே, அவற்றை மட்டும் மேற்கொண் டது. டிரான்ஸ்போர்ட் முதலானவற்றா லெல்லாம் எடுக்கப்பட்ட பலன்.
ஸ்டாலின்: எஜுகேஷன்.....
சுப்ரமண்யன்: ஆமா. உதாரணமாக, வேகமாக ஓர் இடத்துக்குப் போக வேண்டு மானால், ஒரு டிரான்ஸ்போர்ட். மோட்டார் சைக்கிள்ல போலாம். ஆனால் அங்க மோட்டார் சைக்கிள்லே அவன் போய் என்ன காரியம் பண்ணுகிறான். மேனாட் டிலே... நம் நாட்டில் ஏறத்தாழ மோட்டார் சைக்கிள்ளயே பழைய புரோகிதர் அதிலயே வந்து இறங்குவார். இங்க வந்து அந்த வேகம் வந்திருச்சுன்னு சொல்லுவார். இந்த மேனாட்டுக் கருவிகள் இருக்கிறதே, அது எதுக்குவேண்ணாலும் பயன்படும்.
ஸ்டாலின்: யூனிவர்சிட்டி வந்துதே.....
சுப்ரமண்யன்: யுனிவர்சிட்டி வாயிலாக நீங்கள் பழைய கருத்துக்களையும் சொல் லிக்கொண்டே இருக்கலாம். இன்றைக்கு அதுதான் நடக்கிறது. புது கருத்துக் களையும் சொல்லலாம். நீங்க இங்கிலீஷ் லயும் பழைய கருத்துக்களை சொல்லலாம். தமிழிலயும் சொல்லலாம். அப்ப இங்கி லீஷ்ல யுனிவர்சிட்டின்னு பெயர் கொடுத்து, ஷர்ட்டைப் போட்டுக்கொண்டு, டை கட்டிக் கொண்டு போனால், தொப்பிக்குள்ளேயே என்ன இருக்கிறது என்றால், ஒரு ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கருத்துக்கள். அது வெளியே போகாமல் காப்பாற்றுகிறது.
ஸ்டாலின்: நீங்கள் கொறச்சு மதிப் பிடறீங்கன்னு நெனக்கறேன்.
சுப்ரமண்யன்: உண்மையாக மதிப்பிட் டால், கொஞ்சம் கொறச்சாப்போறது. உங்களுக்கு இஷ்டமானால் கொஞ்சம் மாத்திச் சொல்லலாம். அது ஆனால் உண்மையா இருக்காது. தாகூருடைய மொத்த கவிதை, தொழிற்புரட்சிக்கு நேர்மாறா இருந்தது.
ஸ்டாலின்: மாடர்னிசத்துக்கு எகைன்ஸ்டானது.....
சுப்ரமண்யன்: நேர்மாறானது. இது..... மனிதன், இயற்கையை வெல்லுவதற்கு, இண்டஸ்ட்ரியல் ரெவலூஷன். தாகூரு டைய கவிதை முழுவதும், இயற்கையை அனுபவிப்பதற்கு, டு என்ஜாய் நேச்சர். அண்ட் நாட் டு மாஸ்டர் இட். இண்டஸ்ட் ரியல் ரெவலூஷன் ட்ரைஸ் டு மாஸ்டர் நேச்சர். தாகூர் ட்ரைஸ் டு அண்டர்ஸ் டாண்டிட். பிக்கம் பார்டாஃப் இட். அதுதான்.
இதற்கும் அதுக்கும் தொடர்பே கிடையாது. அதனால்தான் தாகூருக்கு அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும், பெரும் புகழ் ஏற்பட்டதற்கு காரணமே இதுதான். அவருடைய பாரம்பரியத்திலி ருந்து முற்றிலும் விலகிப்போய், இயற்கை யோடு ஒன்றாக சேர்ந்து போனாரே, எப்படி முடிந்தது என்பது அவருடைய வியப்பு. அது நமக்கும் உள்ள வியப்புதான். ஆனால் தாகூர் இன்னக்கி அதைச் சொல் லுகிறது. சங்க இலக்கியத்தை தமிழில் படித்தவனுக்கு ஒரு வியப்பும் தராது.
ஸ்டாலின்: ஏன்?
சுப்ரமண்யன்: ஏனென்றால் சங்க இலக்கியத்தில் இயற்கைதான் பேசப்பட்டி ருக்கிறது தமிழிலே. அவர் வங்காளியில் சொன்னதுபோல், தமிழில் சொல்லியி ருக்கிறார்கள். எனக்கு என்னுடைய தாய் மொழியான தமிழில் சொல்லப்படும்போது, அந்த இயற்கையோடு நானும் ஒன்றிப் போகிறேன்.
ஸ்டாலின்: அப்போ, மாடர்ன் ட்ரெண்ட்-னு சொல்றாங்...
சுப்ரமண்யன்: மாடர்னே இல்ல அது. இயற்கையை மாஸ்டர் பண்ணி, தனக்கு அடிமை ஆக்குவது. கலை என்பது மாடர்ன் ஆர்ட். நேச்சரை இழுத்துப் பிடித்து தனக்கு அடக்கி அதனால் வரும் பலன்களை தான் சமுதாயத்தில் பயன் படுத்த பாக்கறது மாடர்ன் இண்டஸ்ட்ரி யல்... அப்போ அதை போரடிக்கறது இருக்குது டிஸ்கஸ்டிங் (disgusting) ஃபெர்ட் அப் (fed up) வித் இட் அப் படீன்னு நெனக்கறவங்களுடைய மனப் பான்மை பாருங்கள்....
ஸ்டாலின்: விருப்புக்கும், சலிப்புக்கும் வித்யாசம் இருக்குது.
சுப்ரமண்யன்: சலிப்பு கொஞ்சம் மிகுந்தால் வெறுப்பாகும். சலிப்புதான் தொடக்கம். சுதந்திரன் என்று ஒருத்தன் சொல்லிக் கொண்டே இருப்பான். சுதந் தரமா இருந்து அதனால் தன்னால் முடிய வில்லையே என்று தெரிந்து, மறுபடியும் மற்றவர்களுடைய தயவுக்கு வருவான். ஆகவே, சுற்றிக் கொண்டுதான் இருக்கும் வாழ்க்கை.
@@@@@@@@@
ஸ்டாலின்: புதுசா உருவான அமெ ரிக்கால, நல்ல லிட்ரேச்சர், நல்ல ஆர்ட்டு, நல்ல..,.. விளைவுகள்லாம் வந்திருக்கே.
சுப்ரமண்யன்: இருக்கிறது.
ஸ்டாலின்: உலகப் புகழ்பெற்ற எழுத் தாளர்களெல்லாம் அங்க இருந்தாங்களே.
சுப்ரமண்யன்: தற்காலத்து க்ளாசிசி சம் என்பது, இடைக்காலத்துல, பழைய காலத்து கிளாசிசிசம்தான் அது. ஆனால் கிளாசிக்கசல்தான். அதே பழைய கிளா சிக்கலே, தற்காலத்து சூழ்நிலை பாதிப்பு னாலே, அது கொஞ்சம் மாறி இருக்கும். அவ்ளோதான். வேறொன்றுமில்லை. ஆனால், அந்த ஆர்ட்டினுடைய கருவிகள் இருக்கிறதே, அதனுடைய முடிவு எல்லாமே கிளாசிக்கலா இருக்கும். வேண்டுமென்றே பிறழ்ந்து போய்விட்டால், அப்பொழுது தான் ரொமான்டிக் வரும்.
அய்ரோப்பியனிசம், அமெரிக்கனிசம் என்பதெல்லாம், இந்தியனிசத்தினுடைய பகுதியாகவே முடியாது. இஸ்லாமிக், ஹிண்டு, மாடர்னிசத்த தடுக்கற சக்திகள், அதுல இஸ்லாம் வெளிப்படையாகத் தடுத்து சில சமயம் தோற்றுப்போகும். இந்து தர்மத்தினுடைய ஒரு தனிப்பட்ட சிறப்பு என்னவென்றால், தடுப்பது தெரியாமல் தடுத்து, தான் மறையாமல் நின்று, எப்பொழுதும்போல் இருந்து, வெளி வேஷம் மட்டும் மாடர்ன்போல் இருந்து, உள்ளூர் பழமையக் காப்பாற்றிக் கொண்டு இருப்பது.
ஸ்டாலின்: சர்வைவ் பண்றது.
சுப்ரமண்யன்: ஆம். ஆதாரமான பண்புகளையெல்லாம் விட்டுக் கொடுத்து விட்டார்கள். இப்ப அகம் புறம் என்ற வேறுபாடு இல்லாமல் போய்விட்டது. லவ், அண்ட் வார், அந்த ஹீராயிக் போய் விட்டது. அதைப் பார்க்கவே இல்லை.
இப்பொழுது புதிதாக ஒன்று வந்தது. அரசியல் என்று......
ஸ்டாலின்: அது இரண்டாம் உலகப் போருக்கு அப்புறம்..
சுப்ரமண்யன்: இல்ல.....அ...ஏன்? சுப்ரமணிய பாரதி எப்ப இறந்தார்? ரெண்டாவது உலகப்போருக்கு பிறகா?
ஸ்டாலின்: இல்ல.அதுக்கு முன்ன.
சுப்ரமண்யன்: முதல் உலகப்போருக்கு முன்னால...ஆ...பின்ன... சுப்பிரமணிய பாரதிதானே அரசியல்லபோய்... கவிதை... ஆகவே, இதெல்லாம் என்ன? கிளாசிக்கல் எடத்தில் வரப்பட்ட ஒரு போர்..தனக்கு...
ஸ்டாலின்: சலிப்பு....
சுப்ரமண்யன்: அ...சலிப்பு, அலுப்பு இதவிட்டுவிட்டு விலகி, வேறெங்கியாவது போலாம் என்று, அப்படி போனது, எங்கே போனார்கள். எங்கே போகிறோம் என்று தெரியாமலே ஒரு பாலைவனத்துக்குள் போய்க்கொண்டு.....
@@@@@@@@@
இந்நூல் பக்கம் 124
ஸ்டாலின்: நீங்க எத்தனை நூல்கள் எழுதி யிருக்கீங்க?
சுப்ரமண்யன்: நானா? அண்மையில் நானே ஒரு கணக்குப் போட்டுப் பார்த் தேன். கடைசி நூல். நூத்தி எழுபதாவது நூல். நூத்தி எழுபது நூல்கள் எழுதியிருக்கிறேன். அவற்றில், அறுபத்து மூன்று நூல்கள் ஆங்கிலத்திலெயும், மிச்சமெல்லாம் தமிழ்லெயும் எழுதியி ருக்கேன். தமிழ்லே எழுதின நூல்கள்லே பிறர்வாழ்க்கை வரலாறு, என் வாழ்க்கை வரலாறு, பழைய நூல்களினுடைய பதிப்பு உரையோடு, ஆராய்ச்சிக் கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள்
ஸ்டாலின்: ஓ.....க்ரியேட்டிவ் ரைட் டிங்கும்...
சுப்ரமண்யன்: இதெல்லாம் க்ரியேட் டிவ் ரைட்டிங்....நாடகங்கள், சிறுகதைகள் அப்பறம் க்ரியேட்டிவ் க்ரிட்டிசிசம், கவிதைகள். இதெல்லாம் க்ரியேட்டிவ் அதாவது, க்ரிடிக்கலாக எழுதினதெல்லாம் ஆராய்ச்சிக் கட்டுரைகள், மத்த நூலிலே பதிப்பித்ததெல்லாம்.
ஸ்டாலின்: நீங்க எப்ப பிறந்தீங்க? இப்ப என்ன வயசு?
சுப்ரமண்யன்: 1915 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆவது நாள் பிறந்தேன்.
@@@@@@@@@
வழக்கமாக படிக்கும் இலக்கிய ஆய்வுகளைவிட இது புதிய பார்வையுடன் அமைந்த நூல் - விவாதத்திற்கு வித்துகள்!
நமது வாழ்த்துகள் - இருவருக்கும்!